Wednesday, July 14, 2010

மலையக வரலாற்றில் தடம் பதித்த சி.வி

தொழிற்சங்கவாதியும் இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளை 1914-04-14 ம் திகதி கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை வட்டக்கொடை மடக்கும்புர தோட்டத்தில் பெரிய கங்காணியின் மகனாக பிறந்து மலையக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்றால் மிகையாகாது.

சி.வி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் மலைய இலக்கிய பரம்பலில் சாரல் நாடன், அந்தனி ஜீவா, இ. தம்பையா, பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசியர் அம்பலவாணர் சிவராசா, கலாநிதி க. அருணாச்சலம், கவிஞர் சு. முரளிதரன், ஜெ. சற்குருநாதன் , லெனின் மதிவாணன், என பலதும் ஆய்வுகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அதிகமானவர்கள் சி.வி யின் இலக்கிய ஆளுமையினையே அதிகமாக தொட்டு ஆய்வு செய்துள்ளனர். இவரது அரசியல் முன்னெடுப்புக்களும் செயற்பாடுகளும் குறைவாகவே ஆய்வுகளில் காணப்படுகின்றன.

அட்டன் மெதடிஸ்த கல்லூரி, நுவரெலியா புனித திருத்துவ கல்லூரி, கnhழும்பு நாலந்தா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த சி.வி, சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தின் தலவாக்கொல்லை பிரதேச உறுப்பினர் ஆனார்.

இலங்கை இந்திய காங்கிரஸின் செயற்பாட்டாளரான சி.வி வேலுப்பிள்ளை 1948ம் ஆண்டு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட காலத்தில் இதற்குக் காரணமாய் இருந்த டி.எஸ். சேனநாயக்காவிற்கு ஆதரவாக இருந்த பல தமிழ் தலைவர்களை கடுமையாக எதிர்த்தவர். பின் நாட்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி தோழர் கே. வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தினை நிறுவி மலையகத்தில் அடையாளப்படுத்தக் கூடியதும் மக்கள் நலன் சார்ந்ததுமான மாற்று தலைமைக்கான தொழிற்சங்கத்தினை நிறுவி கட்டிக் காத்தவர்.

தனது இலக்கிய வரலாற்றின் இலக்கிய படைப்பிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் தொடர்பாக எழுதிய சி. வி இலக்கியங்கள் உழைக்கும் பாட்டாளிகளின் குரலாக அன்று துவங்கி இன்று வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றின் சிகரம் பேராசிரியர் கைலாசபதியின் பாராட்டைப் பெற்ற மலையக படைப்பாளி சி. வி மாத்திரமே என்று எழுத்தாளர் அந்தனி ஜீவா அடிக்கடி கூறியுள்ளார். மலையக வரலாற்றினை நோக்கும் போது சி.வி யின் இடததினை சமன் செய்ய இதுவரை எந்த இலக்கியவாதியும், தொழிற்சங்கவாதியும் தோன்றவில்லை என்றால் மிகையாகாது.

சி.வி யின் வாழ்வும் பணியும் நேர்மையும் உழைப்பும் இன்றைய தொழிற்சங்க வாதிகளும் இலக்கியவாதிகளும் கற்று வாழ வேண்டியது கட்டாயமாகும். மலையக வரலாற்றுத் தடத்தில் மிக ஆழமாக தனது பதிவுகளை வைத்தவர் சி. வி ஆவார்.

ஆங்கில மொழியில் மலையக தமிழ் மக்களின் துன்பங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய இவர் தனது இலக்கிய பணியில் மாத்திரம் மட்டுப்பட்டு சோம்பிக் கி;டக்காமல் இயக்கப் பணியிலும் தடம் பதித்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய உண்மைகளாகும். 1984-11-19ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார் சி. வி அவரது நினைவாக வட்டக்கொடை பூண்டுலோயா வீதியில் கல்லறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

“ ஆழப்புதைந்த- தேயிலைச் செடியின் அடியிற்
புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் - ஏறி மித்து இங்கெவர்
வாழவோ தன்னுயிர் தருவன்”

- சி.வி -

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்குபதிவு மறுக்கப்படுகின்றதா?

வாக்காளர் பதிவும், மீளாய்வும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இந்திய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய முடியாது என்று பல கிராம சேவகர் பிரிவுகளில் பதிவுகள் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் இந்திய கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் நிலை குறித்து தற்போது பலரின் கவனம் திரும்பியுள்ளது.

இவ்வாறு வாக்குப்பதிவு மேற்கொள்ளாமையால் இவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறுவது, அரச உத்தியோகம் பெறுவது போன்றவற்றின் போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அண்மையில் மலையகத்தில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் கலாசாலைக்கு பயிலுனர் ஆசிரியராக சேர்தல், போன்றவற்றின் போது தான் இலங்கை பிரஜை என்பதினை உறுதிப்படுத்த முடியாமல் பலர் இவ்வாய்ப்புக்களை இழந்துள்ளமை முக்கிய விடயம்.

எனினும் இவர்களும் வாக்குப்பதிவுக் உரித்துடையவர்கள் என பல அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அது தொடர்பான தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் அவை தெளிவுப்படுத்தியுள்ளன.

1942ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் நாடற்ற பிரஜையாக்கப்பட்ட மலையக சமூகத்தினருக்கு 1964ம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974ம் ஆண்டின் சிறிமா-இந்திரா ஒப்பந்தங்களின்படி 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமையும் 375,000 பேருக்கு இலங்கை குடியுரிமையும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட போதும் அவற்றில் இந்திய குடியுரிமைக்கு 6,00,000 பேரும் விண்ணப்பிக்கவில்லை. குறிப்பாக இவர்களில் 94,000 பேர் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உடனனே இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு 5ம் இலக்க சட்ட மூலம் நாடற்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகும் 2003ம் ஆண்டு பிரஜா உரிமை திருத்தச்சட்டத்தின் மூலம் பிரஜா உரிமை வழங்கப்பட்டாலும் இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு வாக்குப்பதிவு மறுக்கப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின்படி ஒருவர் தன்னை வாக்காளராக பதிவு செய்வதற்கு இலங்கை பிரஜை என்ற அந்தஸ்து முக்கியமாகும். எனவே இந்திய கடவுச்சீட்டை கொண்டிருந்தாலும் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்த்தோடு உள்ள சகலரும் தம்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 13, 2010

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அபிவிருத்திக் கூட்டம்

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஹட்டனில் (10-07-2010) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், கல்விமான்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் நுவரெலியா, அம்பேகமுவ, கொத்மலை, ஹங்குராங்கத்த, மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட அபிருத்தி பணிகள் பற்றி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

குல்வி, வீடமைப்பு. மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மலையகத்திற்கென தனியான பல்கலைகழகம், ஹட்டன்- டிக்கோயா நகரசபையை மாநகரசபையாக தரம் உயர்த்துதல் மற்றும் அரசிலமைப்பு சீர்திருத்தம் பற்றிய விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைகையில் அபிவிருத்திக் குழுக்களை அமைப்பது பற்றி முன் வைக்கப்பட்ட பிரேரணையில் அக் குழுவில் பிரதேச கல்விமான்கள்,, புத்திஜீவிகள், அரசியல் பிரதினிதிகள் உள்ளடக்கப்படுவர். அக் குழுக்களின் ஊடாக அபிவிருத்திப் பணிகள் அமைச்சரின் கவனததிற்கு கொண்டு வருவது என உத்தேசிக்கப்பட்டது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மலையக மக்களினதும், ஏனைய கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கைகளை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கூட்டங்களை ஏனைய பிரதேசங்களில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தெரிவித்தார்.

ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிற்சங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவை விட அதிகமாகக் கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியதையடுத்து இப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கிலோ கிராம் கொழுந்தை மட்டுமே பறித்து வந்தனர். ஆனால் தோட்ட முதலாளிமார்கள் ஒரு நாளைக்கு 22 கிலோ கிராம் கொழுந்து பறிக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கி.கி கொழுந்து பறிப்பவர்களுக்கு அரைநாள் சம்பளமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Sunday, July 11, 2010

பிரதேச செயலகம், கிராம சேவகர் எல்லைகளை மீள் நிர்ணயிக்க முன்மொழிவுகள்

உள்ளுராட்சி அமைப்பின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பது வெறுமனே புவியியலை மாத்திரம் மையப்படுத்தியதாக கொள்ள முடியாது. சிவில், அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகளைச் சார்ந்த சகல விடயங்களையும் தீர்மானிப்பதாக அமைந்திருக்கின்றது. எனவே குறிப்பாக சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதென மனித அபிவிருத்தி ஸ்தாபனம் தெரிவிக்கிறது. கடந்த வாரங்களில் மலைய மக்களை மையமாகக் கொண்டு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் எல்லைகளை மீளமைத்தல், மீள் நிர்ணயம செய்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல்களையும், கள ஆய்வுகளையும் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது. கலாநிதி ஏ.எஸ். சுந்திரபோஸ், பேராசிரியர் எம். எஸ். மூக்கையா, திரு எஸ் விஜயசந்திரன் ஆகியோர்களின் ஆய்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டும் பல்வேறு மட்டங்களில் இருந்து முன் வைக்கப்பட்ட ஆலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட முன் மொழிவுகளை கொண்டும் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்கான முன்மொழிவுகள் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கப்படல் வேண்டும் எனவும் இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் மனித அபிவிருத்தி ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

மலையக மாவட்டங்களை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கிற்கு அப்பால் மிக அதிகமான தமிழ் பேசும் மக்களைக் கொண்டதாக காணப்படுவது நுவரெலியா மாவட்டமாகும். ஓப்பீட்டு ரீதியில் நுவரெலியா மாவட்டம் ஏறக்குறைய 7,55,500 பேர்கள் சனத்தொகையை கொண்டிருந்த போதும் அங்கு ஐந்து(5) பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன. அதேவேளை அம்பேகமுவ பிரதேச செயலகம் சராசரியாக 130,000 தோட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளதோடு, ஒரு கிராம சேவை அலுவலர் சராசரியாக தோட்டப்பகுதியில் ஏறத்தாழ 3500 மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது தேசிய மட்டத்தை விட ஐந்து (5) மடங்கு பெரிதானது.

அதேபோல் கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட மக்கள் சார் அல்லது தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக பன்வில , புசல்லாவ, நாவலபிட்டிய, தெல்தோட்ட, இரங்கலை, பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவ்வடிப்படையில் பெருந்தோட்ட மக்களை மையமாகக் கொண்டு புதிதாக ரங்கலை பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், ரஜவெல பிரதேசத்தில் 30 கிராம சேவகர்களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் புதிதாக அமைக்கப்பட வேண்டுமென பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மலைய பெருந்தோட்ட மக்கள் பசறை, ஹாலி-எல, அப்புத்தளை, போன்ற பிரதேசங்களிலேயே செறிவாகக் காணப்படுகின்றனர். அதேபோல இப் பிரதேசங்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் குவியப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்த அடிப்படையில் நமுனுகல பிரதேசத்தில் 50 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு புதிதாக வெலன்விட்ட என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொட, இம்புல்பே, இறக்குவான, காவத்தை, நிவித்திகலை போன்ற பிரதேசங்களிலேயே பெருந்தோட்டங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இப் பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மற்றும் கிராமிய பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி பலாங்கொட, இப்புல்பே ஆகிய பிரதேச செயலகங்களுடன் புதிதாக மாரத்தன்ன என்ற பிரதேச செயலகம் 40 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 38,000 சனத்தொகையையும் 38 கிராம சேவகர் பிரிவுகளையும் மையமாக கொண்டு புதிதாக இறக்குவானை என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில்
தொழிலை இழக்கும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள்

இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் இறப்பர் பால் வெட்ட முடியாததால் நாளாந்தம் வேலைகளை இழப்பதுடன் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஏனைய தொழில்துறைகளைப் போலவே இயற்கை அனர்த்தங்களால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கும் நிவாரண மற்றும் நிதியுதவிகளை வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடும் மழை காரணமாக வேலை செய்ய முடியாமலே போனால் அன்றைய நாட் சம்பளத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் நாட் சம்பளத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இந்த நிலையானது 150 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டத் துறையில் தேயிலை உற்பத்தி துறையில் ஈடுபடுபவர்களின் நிலையும் அது போன்றே தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் தோட்ட உத்தியோகத்தர்களைப் பொறுத்த வரையில் மாதச் சம்பளம் பெறுவதால் தமது குடும்ப பொருளாதாரத்தை சமாளித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பெருந்தோட்டத் துறையில் கடும் மழை பெய்தால் இறப்பர் உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மழைக் காலங்களில் இறப்பர் பால் வெட்ட முடியாது. தனியே இறப்பர் உற்பத்தியை மட்டும் கொண்டிருக்கும் தோட்டங்கள் முடங்கிப் போய்விடுகின்றன.

களுத்துறை மாவட்டத்தில் இறப்பர் தோட்டங்களே அதிகளவில் காணப்படுகின்றன. இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் வேலை எதுவுமின்றி இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்கள் வேறு தொழில்களைச் செய்யக் கூடிய சூழல் இறப்பர் தோட்டங்களில் இல்லாததால் அவர்களுக்கு நிவாரண உதவிகளோ அல்லது விசேட கொடுப்பனவுகளோ கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்கள் எதுவித வருவாயும் இன்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள வெளிப்பென்னை, யட்டதொல, மேல்காவ, நேபொட, பதுறலியா போன்ற பகுதி மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலையேற்படுகிறது. அப்பகுதி தோட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகமோ, அரசியல், தொழிற்சங்கத் தலைமை களோ, தொண்டு நிறுவனங்கள் எதுவும் உதவியளிக்க முன்வருவ தில்லை. அதேவேளை தோட்டப் பகுதிகளை அண்மித்த கிராமப் பகுதிகளில் அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல் லாது அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டிக் கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்குவார்கள். ஒருசில அரசியல்வாதிகள் மட்டும் பாகுபாடின்றி தமது சேவைகளைச் செய்கின்றனர். அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் தோட்ட மக்களைச் சென்றடைவது மிகவும் குறைவு.

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பாக தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனி உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இயற்கை அனர்த்தங்கள், தொடர் மழை போன்ற காரணங்களால் பெருந்தோட்டத் தொழில்துறை பாதிக்கப்படும் போது தொழிலாளர்களின் நலன்கள் குறித்து கூடிய அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும். குறிப்பாக இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் போது நிவாரணம் வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை தோட்டம்தான் அவர்களின் வாழ்க்கை. தோட்டத்தின் வளர்ச்சியின் நலன் கருதி கஷ்டப்படும் தொழிலாளர்களை தோட்ட நிருவாகம் கவனிக்க வேண்டும்.

வெளியில் வேலை செய்பவர்கள் எட்டு மணித்தியாலத்திற்கு குறைவாக வேலை செய்து நாட்சம்பளம் பெறுகின்றனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை காலையில் பிரட்டு களத்திற்கு சென்றால் மாலை வரை வேலை செய்து தோட்ட நிருவாகம் எதிர்பார்க்கும் அளவு இறப்பர் பாலோ, கொழுந்தோ கொண்டு வராவிட்டால் அன்றைக்கு அரை நாட் சம்பளம்தான் கிடைக்கும். இவ்வாறான சூழ்நிலையிலும் தோட்டத்தை நம்பி வாழும் மக்களுக்கு யாரும் கேட்காமலே உதவி செய்ய வேண்டும். இதுவே மழைக் காலங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாகும்.


டி. வசந்தகுமார்
தினகரன்

Monday, July 5, 2010

மலையக அரசியல் தலைமைகள் கடந்த பொதுத் தேர்தலில் கற்ற பாடம்

எதிரும் புதிருமாக நவக்கிரகங் களைப் போல் ஒருவரையொருவர் விலக்கி நின்று பார்த்திருந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று அண்மையில் பதுளையில் நடைபெற்றது. த. பவர் பவுண்டேசன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அரசியல் தொழிற் சங்கப் பிரமுகர்களஇ கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர் தலில் பதுளை மாவட்ட தமிழ் பிரநிதித் துவ இழப்பிற்கான காரணங்களை ஆராய்வதே ச்செயலமர்வின் பிரதான நோக்கமாக இருந்தது. முழக்கம் வானொலி யின் நித்தியானந்தனின் அறிமுகவுரையோடு ஆரம்பமான இந்நிகழ்விற்கு பசறை தமிழ் தேசியக் கல்லூரியின் அதிபர் பி. ஆறுமுகம் நெறிப்படுத்து னராக செயற்பட்டார்.
இச்செயலமர்வில் முன்னாள் பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ் எம். சச்சிதானந்தன் ஊவா மாகாண சபை உறுப்பினர்களான க. வேலாயுதம் அ. அரவிந்தகுமார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பெ. பூமிநாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
பவர் நிறுவன நிறைவேற்றதிகாரி உப சேன நாணயக்கார செல்விகள் சைலஜா சாஹிரா ஆகியோருடன் ஆசிரியர்கள் கே. பத்மநாதன் எஸ். இராஜ்குமார் ஆகியோர் முன்னின்றனர். சட்டத்தரணிகளான எஸ். சத்தியமூர்த்தி கே. ரமேஷ் குமார் தொழிற்சங்க பிரமுகர் ஆ. முத்துலிங்கம் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.

அன்று பிரஜாவுரிமை இல்லாதிருந்தோம். இன்று பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கின் றோம். அன்று சட்டம் தடுத்த பிரதிநிதித்துவத்தை இன்று சமூகமே தடுத்து விட்டது. ரோட்டு போட்டவர்களுக்கு வோர்டு போடவில்லை. தோற்கடிக்கப்பட்டு பிரதிநிதித்துவ இழப்பு இந்த இழப்பு போகப் போகத்தான் மக்களுக்குத் தெரி யும் என்கிறார் நிகழ்ச்சி ஏற்பட்டாளரும் த. பவர் நிறுவன உப தலைவருமான வே. உருத்திரதீபன்.

அதிபர் பெ. ஆறுமுகம் உரையாற்று கையில் 1952ம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தோம். பின்னர் நியமன எம். பி. பதவி 1990களில் பிரதிநிதித்துவம் என கிடைக்கலாயிற்று. ஒரு சமூகம் தனது கெளரவத்தை நிலைநாட்ட பிரதிநிதித்துவம் அவசியமாகும். நாம் ஏனைய சமூகங்களோடு வாழ பல்வேறு தடைகள் உள்ளன. தடைகளை தகர்ந்த்தெறிந்து தமிழர்களின் பாதுகாப்பு க்கு தமிழ் பிரதிநிதித்துவம் அவசிய மென்பதை சிந்திக்க வேண்டும்.

கல்வி சுகாதாரம் போன்ற பிரச்சினை களுக்கு தீர்வுகாணவே மக்கள் பிரதிநிதி களை அனுப்புகின்றனர். கடந்த காலத்தில் அவர்களினது உள்ளுடுகள் குறைவானதா என்பதை பிரதிநிதித்துவ இழப்பு யோசிக்க வைத்துள்ளது. மத்திய அரசாங்கத்தினது செயற்பாடு போலவே அதிகார பரவலாக்கலின்படி மாகாண சபை இயங்குகிறது. ஆனால் அண்மைய காலங்களில் மாகாண சபை பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.
வடிவேல் சுரேஷ்இ ‘தமிழ் பேசும் பிரதிநிதித்துவம் என்பது வானத்திலிருந்து கிடைப்பதில்லை. முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ்இ மக்கள் விரும்பாதவர்களை நிராகரித்திருக்கலாம். ஆனால் முழுப் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போக என்ன காரணமென சிந்திக்கவில்லை. புத்திஜீவிகள்இ வர்த்த கர்கள் என பலரிருந்தும் நம் பங்குதாரராக இல்லை. தேர்தலில் பதுளை மாவட்ட தமிழ் மக்களே தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு காரணமாகிறது. வேட்பாளர் தோல்வியடையவில்லை. சமூகமே தோல்வி கண்டுள்ளது’.

ஒரு இலட்சத்து 16 ஆயிரம் தமிழரும் 40 ஆயிரம் முஸ்லிம்களும் இருந்தும் நாம் சிந்திக்க தவறிவிட்டோம். ஒருவரை ஒருவர் குரோத மனப்பான்மையோடு பார்க்கின்ற நாம் தெரிவாகக் கூடியவர் என்று பெருமைக்காக சொல்லவில்லை. போர் நடந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட பிரதிநிதிகளாக 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார் முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ்.
கே. வேலாயுதம் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் காணப்பட்ட நிலை இப்போது முற்றிலுமாக மாறியிருக்கிறது. ஊவா மாகாண இளைஞர் யுவதிகள் கொழும்பிலேயே பெரும்பாலும் கடமை புரிகின்றனர். சுமார் 30 ஆயிரம் பேர் வெளியில் மாவட்டங்களில் உள்ளனர். பதுளை பசறைபண்டாரவளை அப்புத்தளை வர்த்தக நிலையங்களில் கடமை புரிந்த கடைச்சிப்பந்திகள் கூட வாக்களிக்கச் செல்லவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது பொன் சேகாவுக்கு 23 ஆயிரம் வாக்குகளும்பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு பதினெட்டாயிரம் வாக்குகளுமே பசறையில் கிடைத்தன. இம்முறை 11 ஆயிரத்தால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அரசு செய்த சூழ்ச்சிதான் இந்த காலத்தில் அதுவும் தமிழ் சிங்கள புதுவருட தினத்தை அண்மித்த காலத்தில் தேர்தல் நடாத்தியமையும் பின்னடைவுக்கு காரணமாகும். ஒரு இலட்சத்து 16 ஆயிரம் விருப்பு வாக்குகளை இல்லாமற் செய்து விட்டது.
தொழிற்சங்கத்தின் ஊடாகத்தான் தொழிலாளர்கள் உரிமைகளை பெற்று வருகின்றனர். 167 தொழிற்சங்கங்கள் இன்று மலையகத்தில் உள்ளன. இத்தொகை மேலும் அதிகரிக்கலாம். இந்த தொழிற்சங்கங்களும் மக்களை பலவாறு திசை திருப்பி விடுகின்றன. இது வரையிலும் பொது அமைப்பிலான வேலைத் திட்டம் எதுவுமில்லை.

வாக்குகளும் வாக்குச் சீட்டு விற்பனை யும் தொடருகின்றன. அரசியல் ரீதியான கல்விஇ வாக்குகள் தொடர்பான உன்ன தம் அரசியல் ரீதியான தெரிவு அவசியம். இத் தேர்தல் மக்களை சிந்திக்க சந்தர்ப் பம் அளித்துள்ளது. மலையக மக்கள் மத்தியில் தொழிற்சங்கங்களுக்கு அப்பால் பொதுவான அரசியற் செயற்பாடு அவ சியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சிறுபான்மை மக்க ளுக்கு இருந்த உரிமை சிறிது சிறிதாக அருகி போயுள்ளது. தோட்ட உட்கட்ட மைப்பு அமைச்சு அருகிப் போய் திணைக்களமாக மாறியுள்ளது. டில்லி இதற்கு அழுத்தம் கொடுத்தும் கூட நடைமுறைக்கு வரவில்லை. எங்களை நாமே விமர்சனம் செய்து கொண்டு பாதிக்கப்பட்டுள்ளோம்.

முன்னாள் கல்வி பிரதி அமைச்சர் எம். சச்சிதானந்தன்இ ஊவா மாகாண சபையில் முதலில் போட்டியிட்ட போது 62 ஆயிரம் வாக்குகளே இருந்தன. இணைந்து போட்டியிட்டதால் எம்.சுப்பையாஇ சிவம் லோகநாதன்இ சச்சிதானந்தன் என மூவர் தெரிவானோம். இந்த இணைப்பும்இ மாகாண சபை பிரதிநிதித்துவமுமே கால போக்கில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு அடித்தள மிட்டது. வர்த்தகர்கள்இ சிப்பந்திகள் வாக்களிப்பதில் சிரத்தை காட்டாததும்இ அடையாள அட்டையில்லாத காரணத் தினாலும்இ அதில் காணப்பட்ட பெயர் குழப்படியாலும் கூட பலருக்கு வாக்களிக்க முடியாத நிலை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டதெனலாம். பிரதிநிதிகள் எதுவும் செய்யவில்லை என எவரும் குறை கூற முடியாது.

பெருந்தோட்ட ஆசிரியர்கள் பதவிக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத் தன. அதில் நிராகரிக்கப்பட்டவர்கள் குற்றம் கூறமுடியும். கேள்விக்கேற்ற வகையிலேயே ஆசிரியர் உள்வாங்கப்பட்டனர். அதில் ஊழல் நடந்தது என் சுயலாபம் கருதி பேசாது நிருபண உண்மைகள் இருந்தால் நீதிமன்றம் செல்ல முடியும். மாகாண சபைகளினது சட்டவாக்கத்திற்கு செயற்படும் போதும்இ நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கும் வித்தியாசங்களும் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். பிர தேச சபையில் அதிக நிதியை எடுக்க முடியாது. அது 8 1/2 லட்சம் 12 1/2 2 லட்சம் என படிப்படியாக மாறி இன்று 25 லட்சமாக உள்ளது. 25 இலட்சமாக இருந்த
நாடாளுமன்ற நிதி 25 இலிரு ந்து 50 இலட்சமாக மாறியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 68 தோட்டங் களும் 325 டிவிசன்களும் உள்ளன. இதன் அபிவிருத்திக்கு 38 மில்லியன்இ மூன்று கோடி 80 இலட்சம் தேவை. நமக்கென ஒரு சக்தி தேவை. பிரதி நிதிகளும் கட்டாயம் அவசியம். பிரதிநிதித்துவ இழப்பு மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. 1948க்கு பிறகு 1977ல் அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வித்திட்டார் என்றார் சச்சி.

அ. அரவிந்தகுமார் கருத்து தெரிவிக்கையில் ஆளுங் கட்சியோடு இருந்திருந்தால் ஒரு பிரதிநிதித்துவமாவது கிடைத் திருக்கும் இன்று அரசியற் கொள்கையோடு பலரும் உள்ளனர். கடந்த காலத்தில் பல வேலைத் திட்டங் கள்

முன்னெடுக்கப்பட அரசியலே காரணமாயிற்று. ஆதலால்தான் பிரநிதித் துவம் அவசியமாகிறது. வடக்கு கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை திட்டம் வந்தது. ஆனால் மாகாண சபை அமைப்பு கூட பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தவில்லை. ஒன்று சேர்ந்து உறுதிபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேசிய அடையாள அட்டை இல்லாத குறைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஒரு வகையில் பதில் சொல்ல வேண்டும்.நடந்துபோன பிழைகளை ஆராயும் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க நடக்கப் போகும் தேர்தல்களிலாவது நமக்கு கவனமும் ஐக்கியமும் எதிர்வு கூறலாகட்டும்.

பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் நிச்சயமாக உண்டு. இம்மாவட்டத் தைச் சேர்ந்த பெரும்பான்மை இன பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி யுள்ளனர். ஹரீன் பெர்னாண்டோ 50மூ தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார். உதித்த லொக்கு பண்டாரவும் தமிழ் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார். அமைச்சர்களாக உள்ள சிலர் 20மூ அதிகமான தமிழ் வாக்குகளை பெற்றுள்ளனர்.போட்டியென வந்தால் வெற்றி இலக்கை நோக்கியே போட்டியிட வேண்டும். பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட இரண்டு தமிழர் தமிழ் பிரதிநிதிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிட்டனர். வடிவேல் சுரேஷிற்கு கணிசமான வாக்குகளை சிங்கள மக்களும் வழங்கியிருந்தனர். பதுளை மாவட்டத்தில் கனிசமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தமிழ் மக்களுடையதாகும். வியாபாரம் சேர்ந்த பலருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சுயேச்சை குழுக்க ளுக்கு அ ஆ இ என்று குறிப்பிடாது குழப்பியடிதமையும் தேர்தலை பற்றிய சரியான தெளிவின்மையும்இ மூக்குக் கண்ணாடி இல்லாது வந்த முதியவர்கள்இ சரியான சின்னத்தை அடையாளங் கண்டு கொள்ளாமை போன்றவையும்இ ஐ. தே. க. இரண்டே தமிழர் என்ற காரணிகளும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தது எனலாம்.

வேலாயுதம் தேசிய பட்டியலுக்குள் உள் வாங்கப்பட்டிருக்கலாம். மாகாண சபைக்கு கே.விஸ்வநாதன் வந்து சேர வில்லை. எமக்குள் ஏற்பட்டுள்ள பொறாமையே அதனையும் தடுத்துள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக பல அபிவிருத்தி வேலைகளைச் செய்துள்ளேன் என்றார்.

பொ. பூமிநாதன் கருத்து தெரிவிக்கை யில் பொதுமக்களை குறை கூறிப் பயனில்லை பிரதிநிதிகள் மக்கள் தெரிவின் உரிமை சலுகை தொடர்பாக குரல் எழுப்பினரா? நாடாளுமன்றம் சென்று என்ன செய்தார்கள்? தோட்ட வாரியாக தொழிற்சங்கம் வளர்க்க சாராயம் வழங்கினார்கள். மக்களுக்கு அரசியற் தொழிற் சங்க கல்வி ஊட்டப்படல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஜாதி சார்ந்தவர்கள் மாத்திரம் கூறிக் கொண்டு இருந்த நம் மவரிடையேஇ மாகாண சபைத் தேர்தலில் ஒற்றுமை இருந்ததா? தேர்தலுக்கு முன்னரேயே தோல்வி வருமென நினைத்தோம். ஹிந்தகல எஸ்டேட்டில் கள்ளுத் தவறணை அமைக்க காணித்துண்டு கேட்ட கதையும் உண்டு. அரசியல்வாதிகளே சாராய கலாசாரத்தை உருவாக்கி னர். ஜே.வி.பி. ஒரு போதும் சாராயம் வழங்காது. பதுளை மாவட்ட மக்கள் தமிழர்களுக்கு தகுந்ததோர் பாடத்தை புகட்டியுள்ளனர். எத்தனை பிரதிநிதிகள் மாகாண நாடாளுமன்ற சபைகளுக்கு வந்துள்ளனர்.ஜெனரேட்டர்கள் தலைவர்மாரின் வீடுகளிலேயே உள்ளது. கோவில்களுக்கு வழங்கப்பட்ட ஒலி பெருக்கிகளும் அப்படியே. அடிக்கல் நாட்டுவதில் இருந்த ஆர்வம் செயலுரு பெறவில்லை.எனவேஇ இவற்றை மனதிற் கொண்டு எதிர்காலத்தில் உணர்வு பூர்வ மாக செயற்பட வேண்டும்.தகுதியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய அடித் தளமிடுவோம் என்றார்.

சட்டத்தரணி எஸ். சத்தியமூர்த்தி:
இன்று கடந்த கால தேர்தலில் வேண்டும் கடந்த காலத்தில் மூன்று பிரதிநிதித்துவம் இருந்தது.தமிழ் பிரதிநிதித்துவத்தின் போட்டியும் தோல்விக்கு காரணமாயின. வாக்களிப்பு பற்றிய அர சியல் அறிவு ஊட்டப்படுதல் வேண்டும். புதிய தேர்தல் முறை பெரும் பாதிப்பை உண்டு பண்ணப் போகிறது. கடந்த கால கசப்பை மாற்ற இனியாவது உறுதி பூணுவோம். பதுளைஇ கண்டிஇ இரத்தினபுரி சிக்கல் நிறைந்த மாவட்டங்களும் இங்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையே சிறுபான்மையினருக்கு சந்தர்ப்பமளிக்கும்.
சட்டத்தரணி கே. ரமேஷ்குமார்

காலம் கடந்து ஞானம் பிறந்த கதை யாகி விட்டது. தேர்தலுக்கு முன்பதாக இப்படி கலந்துரையாடல் நடைபெற்றி ருந்தால் இத்தகு நிலை ஏற்பட்டிருக் காது. 100க்கு 65மூ குறைபாடுகள் போட்டி யிட்டவர்களிடையே காணப்பட்டன. ஒரு வாக்கை எனக்குத் தாருங்கள்.மற்றத்தை ஏனையோருக்கு என பெரும்பான்மை யினரை காட்டிய நிலையிருந்தது. அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் இறப் புக்கு பின் இ.தொ.கா.வின் நிலைப்பாடும் மாறியுள்ளது.கடந்த கால அனுபவங்க ளாவது புதிய முன்னெடுப்புக்கு அடி கோலட்டும்.

ஆ. முத்துலிங்கம் மலையக மக்களி டையே குறை கூறும் பழக்கமுள்ளது. தீர்வு கூறும் பழக்கமில்லை. யாப்பு திருத்தம் ஊடாக தேர்தல் முறை மாற் றங்கள் தொடரவுள்ளன.தற்போதைய முறை செலவினங்க ளுக்கும் போட்டித் தன்மைக்கும் வழிகோலுகிறது. ரட்னபுர வில் தந்தையும் மகனும் கூட போட்டி யிட்டனர். வெற்றி பெறும் நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். பிரசாவுரிமையை தொழிற்சங்கங்களே பெற்று கொடுத்தன. அதனூடாகவே வாக்களிக்கும் உரிமை கிட்டியது. அன்று பிரசாவுரிமை இல்லாத எமக்கு இன்று பிரதிநிதிகளும் இல்லாது போடியுள்ளனர். கிராமிய அமைப்பு நமக்குத் தேவை எதிர்காலத்தை எண்ணி சிந்தித்து செயற் படுவது அவசியமாகும். இனப் பிரநிதித் துவம் இல்லாதது பெருங் குறைபாடாகும். சமூகம் தோற்கவில்லை. தோற்கடிக்கப் பட்டுள்ளது. வேட்பாளர்களால் சமூகம் பிளவுபட்டுள்ளது. ஒற்றுமையின்மையே தோல்விக்குக் காரணம். சுயஆய்வுக்கு உட்படுத்துங்கள் என்றார்.

ஆசிரியர் எஸ். ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் வாக்காளர் மீது குறை வேண்டாம். பிரிந்து போட்டியிட்டதும் பதவிக்கு வந்த பின் தொழிற்சங்கத்தை முன்னிலை படுத்தியதுமே தோல்விக்கு காரணம். இடைக்கிடை ஆசிரியர் சிவ குருநாதனின் தேர்தல் பாடலும் ஒலித்தது. பல விடயங்களின் பகிர்வோடு இச் செயலமலர்வு புதுக்கேள்விகளை முன் வைத்து நிறைவுற்றது.

பசறையூர் க. வேலாயுதம்