Tuesday, July 13, 2010

ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிற்சங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவை விட அதிகமாகக் கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியதையடுத்து இப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கிலோ கிராம் கொழுந்தை மட்டுமே பறித்து வந்தனர். ஆனால் தோட்ட முதலாளிமார்கள் ஒரு நாளைக்கு 22 கிலோ கிராம் கொழுந்து பறிக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கி.கி கொழுந்து பறிப்பவர்களுக்கு அரைநாள் சம்பளமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

No comments: