Thursday, October 8, 2015

காலா­வ­தி­யான திரி­போஷா

கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் கர்ப்­பிணித் தாய்­மா­ருக்கும் பாலூட்டும் தாய்­மா­ருக்கும் காலா­வ­தி­யான திரி­போஷா சத்­து­ணவுப் பொதிகள் வழங்­கப்­ப­டு­வ­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் கண­பதி கன­கராஜ் குற்றம் சாட்­டினார்.
மாகாண சபை அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குற்றம் சாட்­டினார்.
இங்கு அவர் மேலும் கூறு­கையில், கினி­கத்­தேனை பகு­திக்கு சென்­றி­ருந்த போது அங்கு சில கர்ப்­பிணித் தாய்­மாரும் பாலூட்டும் தாய்­மாரும் தமக்கு வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட திரி­போஷா சத்­து­ணவுப் பொதி­க­ளுடன் என்னை சந்­தித்து கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் காலா­வ­தி­யான திரி­போச சத்­து­ணவு வழங்­கப்­ப­டு­வ­தாக தெரிவித்­தனர்.
அத்­துடன் என்­னிடம் சில காலா­வ­தி­யான பொதி­க­ளையும் வழங்கி சரி­யான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் கோரினர். அவர்கள் என்­னிடம் கொடுத்த காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை இந்த சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தோடு இவற்றை சுகா­தார அமைச்­ச­ரிடம் ஒப்­ப­டைக்­கிறேன்.
மத்­திய மாகாண சுகா­தாரத் துறையில் இது­போன்ற பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­வதை கடந்த காலங்­க­ளிலும் நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறேன். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் காலா­வ­தி­யான, மக்­களின் சுகா­தா­ரத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­கின்­ற­வற்றை வழங்­கு­கின்­ற­போது அதனால் மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற பாத­க­மான விளை­வு­களை சுகா­தார அமைச்சு கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் சுகா­தார துறையில் மக்கள் நம்­பிக்கை இழந்­து­வி­டு­வது மட்­டு­மல்­லாமல், அவர்கள் மன­ரீ­தி­யிலும் உடல் ரீதி­யிலும் பாதிப்­ப­டைவர்.
கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை மீள­ப்பெற்று உரி­ய­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத்தை வழங்க வேண்டும். கினி­கத்­தேனை வைத்­தி­ய­சாலை உட்­பட மத்­திய மாகா­ணத்தில் உள்ள ஏனைய வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் காலா­வ­தி­யான திரி­போஷா பொதிகள் களஞ்­சியப் படுத்­தப்­பட்­டி­ருந்தால் அவற்றை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்­டு­கிறேன்.
இவ்­வி­டயம் தொடர்பில் மத்­திய மாகாண சகா­தார அமைச்­சர் கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும் அடுத்த மாகாண சபை அமர்வில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

No comments: