Thursday, October 8, 2015

தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்கு வழங்கவும்

மேல்­கொத்­மலை மீள்­கு­டி­யேற்­றத்­திட்­டத்தின் கீழ் தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல குடி­யி­ருப்­புத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்குக் கைய­ளிக்­கு­மாறு மலை­யக தொழி­லாளர் முன்­னணி கோரிக்கை விடுத்­துள்­ளது.
 
மேல் கொத்­மலை நீர்மின் திட்­டத்தின் கீழ் இடம்­பெ­யர்ந்த ஹொலிரூட், ரத்­னீ­ல­கல பிரிவை சேர்ந்த தொழி­லா­ளர்­களின் நலன் கருதி அமைக்­கப்­பட்ட புதிய குடி­யி­ருப்புத் தொகு­தியில் புதிய வாசி­க­சாலை கட்­டடம் ஒன்று அமைக்­கப்­பட்­டது.
 
குடி­யி­ருப்­புக்கள் 2009 ஆம் ஆண்­டி­லேயே மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­பட்டு விட்ட போதிலும் வாசி­க­சாலை கட்­டடம் இது­வரை மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
எனவே தாம­த­மின்றி மேற்­படி கட்­டடத்தை மக்­களின் பாவ­னை க்­காக கைய­ளிக்­கு­மாறு தோட்ட நிர்­வாகி மேல் கொத்­மலை திட்ட அதி­காரி, மாவட்ட மற்றும் பிர­தேச செய­லா­ளர்கள் மின்­சக்தி எரி­பொருள் அமைச்சர் ஆகி­யோ­ருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை மாநில நிர்வாக அதிகாரி எஸ். வரதராஜன் தெரிவித்தார்.

No comments: