Tuesday, March 8, 2011

சர்வதேச மகளிர் தினம் இன்று

சம உரிமை சமவாய்ப்பு எதிலும் முன்னேற்றம் எனும் தொனிப் பொருளில் பொதுவாக சர்வதேசமகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ந் திகதியன்று உலகளாவிய ரீதியில்அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆண் ஆதிக்கத்தினால்இ பெண்கள் பல் வேறு வன்முறைகளுக்கும்உபாதைகளுக்கும் உட்பட்டு தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தும் வேதனையில் மூழ்கியிருப்பதை உலகெங்கிலும் பரந்து வாழும் மக்களுக்கு ஞாபகப்படுத்தி பெண்களையும் சரிசமஉரிமையுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு அடித்தளம் அமைப்பதற்கு இந்த சர்வதேச மகளிர் தினம் உதவுகின்றது. பெண்கள் யுத்தம் மற்றும் வன்முறைகளினால் பெரும் துயரத்தைஅனுபவிக்கிறார்கள். பொதுவாக பெண்களின் பாதுகாப்புஇ சமூக அந் தஸ்து என்பனபாதிக்கப்பட்டுஇ இளம் விதவைகள் என்று நாமம் சூட்டப்பட்டு சமூகத்தில் நிலவும் ஆண் ஆதிக்க அவலங்களில் சிக்கி அவர்கள் வேதனைக்கடலில் மூழ்கி அல்லல்படுகிறார்கள்.

உலகில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் மேற்கத்தைய நாடுகளில்தொழிற்சாலைகளில் பெண்கள் பணி புரிந்த காலத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைஎதிர்த்துஇ 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதியன்றுஇ அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் பெண்கள்தங்களுக்கும் ஆண்கள் பெறும் வேதனத்திற்கு சரிசமமான வேதனத்தையும் ஏனைய சலுகைகளையும் கோரி ஆடைத்தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டநிகழ்வை நினைவு கூரும் முகமாகவே சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் யோசனையைமுதன் முதலில் முன்வைக்கப்பட்டது.

1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை கேட்டுஇ நடத்தியபோராட்டத்தை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி தியயோடர் ரூஸ்வெல்ட் நிலைகுலைந்து போனதாகவும் அதைத் தொடர்ந்து பெண்களின் உரிமை படிப்படியாகக் கிடைக்க ஆரம்பித்ததாகவும்அறிவிக்கப்படுகிறது. 1910 ஆம் ஆண்டில்இ ஹேகன் நகரில் சர்வதேச பெண்கள் மகாநாடு நடத்தப்பட்டது. அதையடுத்தே உலக நாடுகளில் சர்வதேச மகளிர் அமைப்பு கள் தோன்றின.பெண்களிடமும் மனித நேயம் இருக்கிறது. எனவே பாலியல் வேறுபாட்டிற்கு புறம்பாக ஆண்மைபெண்மை என்ற பாகுபாடு காண்பிக்காமல்இ தங்கள் உரிமைகளை வழங்கு மாறு பெண்ணினம் ஆணினத்திடம் அன்று அன்புக்கரம் நீட்டிய போது ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்தஅன்புக்கர த்தை பற்றிக் கொண்ட வேளையிலேயே ஆண் பெண் சமத்துவம் உலகில்சாத்தியமாகியது.

இலங்கையில் மார்ச் மாதம் 8ந் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.எனினும்இ அது பொதுவிடுமுறை தின மல்ல. உலகின் பல நாடுகள் இன்றைய தினத்தை விடுமுறைதினமாக அனுஷ்டிக்கின்றன. 1909 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதலாவது தேசிய பெண்கள்தினம் பெப்ரவரி 28ந் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் உலகெங்கிலும்இருந்து 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கோபெனேகளில் பெண் உரிமை குறித்துஇஒன்று கூடி கருத்துக்களை முன்வைத்தனர்.
பெண் உரிமையை பொறுத்தமட்டில் இலங்கை மற்ற நாடுகளை முந்திக் கொண்டு பெண்களின்உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை பாராட்டுக்குரிய ஒருவிடயமாகும். இந்தியாவுக்கு முன்னரே இலங்கைப் பெண் களுக்கு வாக்குரிமை கிடைத்தது.பாராளுமன்றம் பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு சரிசம வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும்என்பதற்கான சட்டம் இலங்கையில் இருக்கின்ற போதி லும்இ அது விடயத்தில் இலங்கையோ வேறுபல நாடுகளோ அந் தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வறிவிட்டன.

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியாக 1960 ஆம் ஆண்டில் திருமதி ஸ்ரீமாவோபண்டாரநாயக்கவை நியமித்துஇ இலங்கை உலக சாதனையை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர்இஅவரது புதல்வி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் நிறைவேற்று அதி காரத்தைக் கொண்டஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். எனினும்இ பாராளுமன்றத்தில் பெண்களுக்குஅளிக்கப்படும் விகிதா சாரம் மிகவும் குறைவாக இருப்பது வேதனையை அளிக்கின்றது.இலங்கையில் ஆண் ஆதிக்கம் வலுவிழந்து வருகின்ற போதிலும்இ பெண் உரிமைகளுக்குமுக்கியத்துவம் அளித்துஇ அவர்களுக்கு அரசியலில் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பது மிகவும்அவசியமாகும்.

இறுதியில் மலையக பெருந்தோட்டங்களில் பணிபுரியும் பெண்களு க்கு சம சம்பளம் அளிப்பதிலும்இலங்கை பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.தேயிலைத் தோட்டங்களிலும்இ இறப்பர் தோட்டங்களிலும் இந்த பெண்கள் சீரற்றகாலநிலையையும் பொருட்படுத்தாமல்இ நாட்டின் தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்காகமேற்கொள்ளும் பங்களிப்பை நாம் மறந்துவிடலாகாது.

No comments: