Wednesday, February 16, 2011

பசறையில் 8 தோட்டங்களில் 3,603 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை

பசறை பிரதேசத்தில் 8 தோட்டங்களில் 3,603 பேர் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளனர்.இவர்களில் சுமார் 400 பேர் மாத்திரம் கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தற்காலிக அடையாள அட்டை பெற்றுள்ளனர்.ஏனையவர்கள் போதியளவு தெளிவின்மையால் வெறுமனே வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.இது குறித்து பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தவில்லை.இதன் காரணமாக இவர்கள் வாக்களிக்கவில்லை. இதை கவனத்தில் கொண்டு இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கிராம சேவகர் ஊடாக தேசிய அடையாள அட்டையின்றி இருப்பவர்களின் விபரம் திரட்டப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க அப் பிரதேச தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

No comments: