Wednesday, February 16, 2011

நல்லிணக்க ஆணைக்குழு மலையக மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் மற்றும் விசாரணைகள் நுவரெலியா,அட்டன்,பதுளை போன்ற பிரதேசங்களில் நடத்தப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரையும் இலங்கை சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஏனைய பிரதேசங்களில் நடத்தப்பட்டதைப்போன்று மலையக பிரதேசங்களிலும் ஆணைக்குழு அதன் அமர்வுகளை நடத்தினால் இம்மக்களுக்கு தாமாகவே தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.அதேவேளை இம்மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தி அவர்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் வாய்ப்பாக இருக்குமென்பதுடன் ஆணைக்குழு அரசிடம் தனது பரிந்துரைகளை முன்வைக்கும்போது மலையக மக்களின் பிரச்சினைகளையும் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என மனித அபிவிருத்தி தாபன தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் இந்த ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

No comments: