Wednesday, April 8, 2009

தொழிற்சங்கங்கள் கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும்
வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் முதலில் தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இன்றைய நிலையில் இது சாத்தியமற்றதாகும் ஆதலால் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்தாக வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளத்தை அந்தந்த காலத்தில் உரிய வகையில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் செய்து கொள்ளப்பட வேண்டும்.
2006ம் ஆண்டுடன் முடிவடைந்த பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை மாதிரியாக வைத்துக் கொண்டு இதுகாலம் வரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
இந்த நிர்ணயம் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடள் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி தொழிற்சங்கங்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்;ந்துள்ளது எனக் கூறியும் வரட்சி காலங்களில் வேலையை குறைத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி அவலநிலையில் இருப்பதைப்பற்றி எந்த ஒரு நிர்வாகமும் பொருட்படுத்தவில்லை.
ஏப்ரல் மாதத்தைத் தொடர்ந்து இனிவரும் மாதங்களில் கொழுந்து அதிகரிக்கும் அதேநேரம் தொழிலாளர்களின் வேதனத்தை கூட்டு ஒப்பந்தத்தால் மாத்திரமே அதிகரிக்க முடியும்.
தொழிற் சங்கங்கள் பயனற்ற விவாதங்களில் ஈடுபடாமல் ஒருங்கிணைந்து சம்பள உயர்வுக்கு ஒரே முகமாக செயல்படுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியும்.
அரசு நேரடியாக தோட்டங்களில் ஈடுபட முடியாமலேயே தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வரவு செலவுத திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது.
விலகி நின்று விமர்சிப்பவர்கள் இதை உணர்ந்து தொழிற்சங்க பலத்தை ஒருமுகப்படுத்தி தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் வகையில் செயல்பட முன்வர வேண்டும்
தொழிற்சங்கங்கள் சர்ச்சைகளில் ஈடுபடுவதை விட சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என உடனடியாக கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும் சர்ச்சைகளில் ஈடுபடுவதின் மூலம் பெருந்தோட்டக் கம்பனிகளே இலாபமடையும்.
எஸ். ஜோதிவேல்
ஐ.தொ.கா. நிர்வாகச் செயலாளர்.

No comments: