Wednesday, April 8, 2009

பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்றத்தினை உருவாக்க பெண் தொழிலாளர்களே முன்வரவேண்டும்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மது என்ற அரக்கன் ஆக்கிரமித்திருக்கும் வரை அப் பகுதிகளில் முன்னேற்றகரமான மாற்றத்தினை என்றுமே எதிர்பார்க்கமுடியாது. இம் மாற்றத்தினை இலகுவில் ஏற்படுத்தக்கூடியவர்கள் பெண் தொழிலாளர்களே எனஇவ்வாறு, முன்னாள் பதுளை மாவட்ட பா.உ, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் தொழிற்சங்கவாதிகள் மது போத்தல்களை தொழிலாளார்களுக்கு வழங்கிவந்தனர் ஆனால் அந்நிலை தற்போது தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற சூழல் மலையகப்பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதனால் சமூகச் சீரழிவுகள் பெருமளவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெண்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகளினால் மட்டும், மலையகத்தில் மதுவினை முற்றாக ஒழிக்க முடியும். அந்நிலை ஏற்பட்டுவிட்டால் மலையகத்தின் பெரும் தோட்டப் பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டும் என்றார்.

No comments: