Monday, May 30, 2016

மலையக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை - அங்கலாய்க்கும் மக்கள்

மலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தை எதிர்நோக்கியதோடு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே தோட்ட நிர்வாகத்தினால் தொழில் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பொருளதார ரீதியில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததோடு குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடன் சுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போது கொழுந்து விளைச்சலின் காரணமாக தொழிலாளர்கள் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு நாளுக்கு அதிகமான கிலோ கிராம் கொழுந்தினை பறித்து வருவதோடு அதிகாலை 6 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் மாலை 6 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை சீர்கேட்டினால் இத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு மழை, குளிர் பாராமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருமானத்திற்காக போராடுகின்றனர்.
இத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் அறிந்த தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு பகல் உணவு வழங்குவதோடு மாலை நேரத்தில் கொழுந்து மடுவங்களில் வைத்து கோப்பி தேநீர் வழங்கி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதாக தோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தில் தண்ணீர் இருப்பதற்காகவும், கொமிஷன் என்ற அடிப்படையில் ஒரு நேர நிறுவைக்கு 3 கிலோ தொடக்கம் 5 கிலோ வரை தங்களுடைய கொழுந்து இறாத்தலில் கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காமல் வருமானத்தை நோக்கி நிர்வாகம் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மழை நேரத்தின் போது விடுமுறை கூட தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கடும் கஷ்டத்தில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்படவில்லை என தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் முடிவுவடைந்து ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த போதிலும் சம்பள உயர்வை பெற்று தருவதாக கோரிய மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு விட்டு அமைதியாக மௌனம் சாதியப்பதாக தொழிலாளர்கள் அங்கலாயிகின்றனர்.
கடந்த வருடங்கள் பல போராட்டங்களை சம்பள உயர்வுக்காக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகவும், தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களுக்கு மாத்திரமே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் இருக்கும் எனவும், அதன்பின் கொழுந்து விளைச்சல் படிப்படியாக குறையும் என தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு மீண்டும் வரட்சி ஏற்படும். அப்போது மீண்டும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்று தருமாறு தோட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடம் ஞாபகப்படுத்துகின்றனர்.

Saturday, May 28, 2016

ஹட்டனில் மண்சரிவு- சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

ஹட்டனில் மண்சரிவு

ஹட்டன், சமலனகம பகுதியில் ஏற்பட்ட மன்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர்   இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர். மேலும் மண்சரிவு பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளின்  வெடிப்புகள் எற்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட சாமிமலையில்  இன்று (28) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 41 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடம்பெயர்ந்த 200 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கக்கலையில் மண்சரிவு

லிந்துலை, தங்கக்கலை தோட்டம் கிம்ரு மேற் பிரிவில் இன்று (28-05-2016) காலை ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. இம்மண்சரிவினால் 2 வீடுகளில் வசித்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த லயன் தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.


கினிகத்தேனை பிரதான வீதியில் வெடிப்புகள்

ஹட்டன், கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (26) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும் கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து, வெடிப்பு ஏற்பட்ட இடத்தை   வியாழக்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை பயன்படுத்துவதை தடைசெய்யமாறு உத்தரவிட்டுள்ளனர். வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மஸ்கெலியாவில் மண்சரிவு - 200 பேர் பாதிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில்  28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர். 

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

லிந்துலை மவுசல்ல தோட்டங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர். 

இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ் இறங்கியுள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 

இதேவேளை நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான நிலை காணப்படுகின்றது. 


மரம் முறிந்து விழுந்தில் 07 வீடுகள் சேதம் 35 போ் இடம்பெயர்வு

தெல்தோட்டை நாரங்கன் தோட்டப் பகுதியில் இன்று விடியற்காலை 07.00 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 07வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெல்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் 07 குடும்பங்களை சோ்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் போது 03 வீடுகள் முழுமையாகவும் ஏனைய 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா். 




Friday, May 27, 2016

அணுகுமுறைகள் முரண்பட்டு காணப்படுவதாலேயே பேச்சுக்கள், போராட்டங்கள் தோல்வியடைகின்றன

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து ­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர் என்று ஐக்­கிய தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச்­செ­ய­லாளர் முத்­து­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விட­ய­மாக அவர் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே, தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் அத் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்ட வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்­தி­களும் இருப்­ப­தாக நி­னைத்தே தற்­போது மலை­யகத் தலை­மைகள் செயற்­பட்டு வரு­வதைக் காண முடி­கி­றது. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர்.
தோட்டத் தொழி­லாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்­பா­டு­களை ஒதுக்கி வைத்து அனைத்து மலை­யக சிறிய, பெரிய தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒன்­றி­ணைந்த போராட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைந்த ஆக்கற் காரி­யங்­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். இப்­போ­ராட்­டங்கள் அர­சையும், தோட்­டங்­களை பொறுப்­பேற்­றி­ருக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தையும் வலி­யு­றுத்தி, அழுத்­தங்­களைக் கொடுக்­கக்­கூ­டி­ய­தா­கவே அமைய வேண்டும். அவ்­வாறு அமைந்தால் மாத்­தி­ரமே பிர­தி­ப­லனைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.
மலை­யக தொழிற்­சங்­கங்கள் தனித்­த­னி­யாக பிரிந்து நின்று போராட்­டங்­களை மேற்­கொள்­வதன் மூலம் போராட்டம் பல­வீ­ன­ம­டை­யவே செய்யும். அனைத்து தொழிற்­சங்­கங்­களின் இலக்கு சம்­பள உயர்வு விட­யத்தில் ஒன்­றா­ன­தாக இருக்கும் போது அத்­தொ­ழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதன் பயனை தோட்டத் தொழி­லா­ளர்கள் அனு­ப­விக்க கூடி­ய­தாக இருக்கும். அர­சாங்­கத்­தினால் தனியார் துறை­யி­ன­ருக்கும் வரவு செலவுத் திட்­டத்தின் மூலம் அறி­விக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் கிடைக்­காமை அடிப்­படை உரிமை மீற­லாகும். இதனை அனை­வரும் புரிந்­து­கொண்டு செயற்­படல் வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­படல் வேண்­டு­மென்று அடிக்­கடி கூறி வந்த போதிலும் அக்­கூற்று இது­வ­ரையில் போலித்­த­ன­மா­ன­தான அமைந்து விட்­டமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.
தற்­போ­தைய வாழ்க்கைச் செலவு உயர்­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளினால் எதிர்­கொள்ள முடி­யாது அவர்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். வாழ்க்கைச் செல­வினை ஈடு­செய்ய முடி­யா­மை­யினால் அவர்கள் தோட்டத் தொழில் துறை­யி­லி­ருந்து வில­கிச்­சென்று கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நிலை தொடரும் பட்­சத்தில் தொழி­லா­ளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறை­யி­னையே மூட­வேண்­டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை நீடித்து பெருந்­தோட்­டங்கள் மூட வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­மே­யானால் அத் தோட்­டங்­களை நம்­பி­யி­ருக்கும் தொழி­லா­ளர்­களின் சாபங்­க­ளுக்கு அனைத்து மலை­யக தலை­மை­களும் உட்­ப­ட­வேண்­டி­வரும் என்றார்.

தோட்­டத்­திற்கு எக்­கா­ரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தாருங்கள்

மண்­ச­ரிவு ஏற்­பட்டு 16 உயிர்­களை காவு கொண்ட புளத்கொ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்­களுக்கு வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தரு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்­றாட்­ட­மாக கோரு­கின்றோம் என்று புளத்­கோ­ஹு­பிட்­டிய மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். தயவு செய்து களு­பான தோட்­டத்­திற்கு செல்­லு­மாறு எங்­களை வற்­பு­றுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்­பட்ட இட­மா­கவே பார்க்­கின்றோம். எங்­களால் இனிமேல் புளத்­கோ­ஹு­பிட்­டிய களுப்­பான தோட்­டத்தில் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது என்றும் அந்த மக்கள் குமு­று­கின்­றனர்.

புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வை­ய­டுத்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து யக்­கல மகா­வித்­தி­யா­ல­யத்தில் 57 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக தஞ்­ச­ம­டைந்­துள்­ள அந்த மக்­கள் இந்த உருக்­க­மான கோரிக்­கையை முன்­வைத்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் துய­ரத்தை வெளி­யி­டு­கையில்,

உங்­க­ளிடம் ஒரு­வி­ட­யத்தை மன்­றாடிக் கோரு­கின்றோம். நாங்கள் கோரு­கின்ற இந்த விட­யத்தை தயவு செய்து அர­சாங்­கத்­திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் நாம் இது­வரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் எமது உற­வுகள் 16 பேரை இழந்­து­விட்டோம். அந்த 16 பேரும் மண்­னோடு மண்­ணாக புதைந்து போகி­னர்.

அந்த வகையில் பார்க்­கும்­போது புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்டம் வாழ்­வ­தற்கு ஆபத்­தான இட­மென்­பது நிரு­ப­ன­மா­கி­விட்­டது. எனவே எக்­கா­ரணம் கொண்டும் இதன்­பின்னர் புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு நாங்கள் செல்­லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒரு­போதும் நிம்­மி­யாக வாழ முடி­யாது.இதனை புரிந்து கொள்­ளுங்கள். எமது நிலை­மையை உண­ருங்கள். எமது 16 உற­வு­களை பரித்­தே­டுத்த அந்த தோட்­டத்தில் எம்மால் இனி வாழ முடி­யாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாது­காப்­பான இடத்தில் வீடு­களை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்­கி­ருந்து கொண்டு வேண்­டு­மானால் களு­பான தோட்­டத்­திற்கு தொழி­லுக்­காக சென்று வர­மு­டியும். ஆனால் களு­பான தோட்­டத்தில் வாழ மாட்டோம்.

மண்­ச­ரிவு ஏற்­பட்­டதன் பின்னர் எமது பகு­திக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்­பரம் புதிய வீடு­களை அமைத்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால் களு­பான தோட்­டத்தில் எமக்கு வீடு­களை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடு­களை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.

Tuesday, May 24, 2016

நிம்மதியாக வாழ ஒரு காணி துண்டைத் தாருங்கள்

நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் அனர்த்த அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டுனாலி, அப்பர் கலஹா, கலஹா குரூப், பட்டியகம, கிதுல் முல்ல, தெல்தோட்டை குரூப் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகள் இதனால் பெரிதும் பாதிப்பப்பட்டுள்ளன. பொதுவாக இத்தோட்டங்களைச் சேர்ந்த 10 இற்கு மேற்பட்ட லயக்குடியிருப்புக்களின் 162 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இம்மக்கள் வாழும் லயக்குடியிருப்புக்களுக்கு அருகாமையில் நிலப்பிளவுகளும் நிலம் தாழ்ந்தும் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காணப்படுவதால் இம்மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் குடியிருப்புக்கள் ஆபத்தானவை என பிரதேச செயலகத்தினால் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லையென மக்கள் ​தெரிவிக்கின்றனர்.
மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர், கண்டியை மையமாகக்கொண்டு கேகாலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த்
தெல்தோட்டைப்பிரதேசத்திற்குச் சென்று அவர் அங்கு மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார். அதன்போது சிலர் வழங்கிய கருத்துக்களே இவை.
எஸ்.ஜெயந்தி கருத்து தெரிவிக்கையில் :
நான் ஒரு கால்நடை விவசாயி. தனது குடும்ப வாழ்வாதாரத்தை கால் நடைகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தைக் கொண்டு சீவியம் நடாத்தி வருவதாக தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கு உகந்த பிரதேசமாக டுனாலி பிரதேசம் காணப்படுகின்றது. தற்போது டுனாலிப் பிரதேசம் அனர்த்தப் பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வனர்த்தத்தினால் என்னைப் போன்ற பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி எமது குடியிருப்புக்களை உருவாக்க வேண்டும் என அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்குத் தேவை பாதுகாப்பான காணித்துண்டொன்று. அடுத்து ஜீவாதாரத்திற்கான தொழில். என்றார்.
எல். காஞ்சனா (பாடசாலை மாணவி):
நாம் மலையக மாணவர்கள் என்ற பகுதிக்குள் வருகின்றோம். அதனால் பல இன்னல்களை அவ்வப்போது சந்தித்துவருகின்றோம். பல வசதியீனங்களுக்கு மத்தியில் நாம் கற்றுவருகின்றோம். மின்னொழுக்கு ஒழுங்கீனத்தினால் மலையகத்தின் பல லயக்குடியிருப்புக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளமையை நாம் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். அதற்கு நாமும்விதிவிலக்கல்ல.
அதேபோல், மழை காலங்களில் எமது குடியிருப்புக்கள் அவ்வப்போது அழிந்து சேதமடைகின்றன. இந்நிலை தொடருமாயின் எமது கல்வி பாதிக்கப்படுவதோடு மலையக மக்களின் அபிவிருத்தியில் பின்னடைவும் ஏற்படும்.
இவற்றை கருத்திற்கொண்டு எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்துறையினரும் எமக்கு பாதுகாப்பான நிலத்தை வழங்கி கல்வியுரிமையை உறுதிப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் கல்வியைத்தடையின்றிப்பெற கல்வியமைச்சர் எமது இராஜாங்க கல்வியமைச்சர் உள்ளிட்டோர் உதவவேண்டும்.என்றார்.
ஆர். வேலு (ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளி):
தோட்டத்தொழிலாளிகள் ஏமாறவே பிறந்தவர்கள் என்பது போல தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏன் இயற்கையும் நடந்துகொள்கின்றன.
காலங்காலமாக தோட்ட முகாமைத்துவமும் தொழிற்சங்கங்களும் அரசியல் வாதிகளும் எம்மை ஏமாற்றி வருகின்றனர்.இதனை யாவரும் அறிவர். தேர்தல் காலத்தில் மாத்திரம் எமது பகுதிக்கெல்லாம் வருவார்கள். தொண்டை கிழியக்கத்துவார்கள். அது செய்வோம் இது செய்வோம் என்பார்கள். ஆனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றமே.எங்களை ஏமாற்றி பிழைப்போர் எமது இன்றைய நிலையை நன்கு அவதானித்து எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது பிராயச்சித்தமாகும்.
நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடைகளை எங்களால் தேடிக்கொள்ள முடியும். நாம் பீதியின்றி நிம்மதியாக வாழ எமக்கு ஒரு காணித்துண்டை தாருங்கள்.
இதுவே எமது விருப்பம்.எனத்தெரிவித்தார்.
நன்றி- தினகரன்

தோட்டத் தொழிலாளர்கள் 2500 ரூபாவுக்கு உரித்துடையவர்கள் அல்ல

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு உரி;த்துடையவர்களாக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி. இராஜதுரை இது பற்றி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏமாற்று வித்தையாகும் என்று தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இதனால் சொல்லொணா துன்ப துயரங்களை தொழிலார்கள் அனுபவித்து வருகின்றார்கள் இந்நிலையில் இவர்களுக்குரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கடமையாகும். 

தொழிலாளர்களின் நலன்கருதி அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனினும் இங்கு சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. 

2016ம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் மிகவும் முக்கியமானது. இச்சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை ஒன்று இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது. 

எனவே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தெரிந்திருந்தும் ஒப்பந்தம் இல்லாமல் போக வேண்டுமென்றால் இரு சாராரில் ஒரு சாரார் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். எனினும் நிலைமை இன்னும் அவ்வாறு அமையவில்லை. கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் பிரதான கட்சிகளும் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றன. இதனடிப்படையில் விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லையென்று கூறிவிட முடியாது 

இதேவேளை குறைந்தபட்ச வேதன சட்டத்திற்கமைய தொழிலாளர்களுக்கு தொழில் தருநர்களால் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வேதனத் தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் குறைந்த பட்ச மாதாந்த வேதனம் பத்தாயிரம் ரூபாய் எனவும் நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் 400 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இச்சட்டமும் கூட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது. 

கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மையுமாகும்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக காலத்துக்குக் காலம் உரிய சம்பள உயர்வினை பெற்றுக்­கொ­டுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பதனை விடுத்து நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அமைச்சு பதவிகளின் ஆளுமையின் ஊடாகவும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினையும் விசேட கொடுப்பனவுகளையும் ஏதேனும் ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும். அதைவிடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற முனைவது தவறான விடயமாகும் என்றார். 

மண் சரிவு அபாயம் - 390 பேர் வெளியேற்றம்

கொத்மலை, பெல்மதுளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, 390 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 6, 7, 8ஆம் ஆகிய இலக்க லயன் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புப் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால், 6ஆம் இலக்க லயன்தொகுதியில் 10 குடும்பங்களும், 7ஆம் இலக்க லயன்தொகுதியில் 7 குடும்பங்களும், 8ஆம் இலக்க லயன் தொகுதியில் 10 குடும்பங்களும், தற்காலிகக் கூடாரங்கள் இரண்டில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் அடங்கலாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 சிறுவர்களும் 6 மாத சிசுக்கள் இருவரும் அடங்குகின்றனர். மேலும், அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால், போதியளவான மலசலக்கூட வசதிகள் இன்மையால் அவர்கள், பல்வேறான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால்,  இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு,  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒருவருட காலமாக எவ்விதமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே, தங்களுடைய உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் இம்முறை, அனர்த்த அபாயம் அதிகரித்துவிட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, பெல்மதுளை பொரோணுவ தோட்ட மேற்பிரிவு இலக்கம் - 03 லயன் அறைகளில் வசித்துவந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாகவே இவர்கள், இடம்பெயர்ந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இப்பகுதியில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டட ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இவ்விடம் மண்சரிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய இடமென்று இனங்காணப்பட்டது. அப்பகுதியிலிருந்து வெளியேறியோர், பொரோணுவ தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குருநாகல் கிரிந்திவெல, உடவெல கல்உடகந்தையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது,