Wednesday, August 12, 2015

மலையக கட்சிகளின் பதில் என்ன?

இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. மலையகத்தில் போட்டியிடுகின்ற திகாம்பரம், ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதோடு, ரங்காவின் கட்சியும் ஆறுமுகம் தொண்டமானின் காங்கிரஸ் கட்சியும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி புதிய ஆட்சியைக் கைப்பற்ற முழு மூச்சுடன் களத்தில் நிற்கின்றன.
மலையகம் சார்ந்த தமிழ் கட்சிகளில் ரங்காவின் கட்சியைத் தவிர திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த கட்சிகள் பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் ஆசனங்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மலையகத்தின் ஏனைய பிரதேசங்களில் தமிழ் வாக்குகளை யானைக்கும் வெற்றிலைக்கும் பெற்றுக்கொடுப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வத்தோடு செயற்படுகின்றன. தமது அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமது அணிசார்ந்து பெருந்தோட்டத்துறை வாழ் மக்களுக்கும் பொதுவாக மலையகத்துக்கும் பெற்றுக்கொடுக்கப் போவது என்ன? மக்களைக் கவரும் மேடைப் பேச்சுக்களோ, துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்படுபவை போன்றன என்றும் ஏட்டுச்சுரக்காய்தான்.
முன்னைய மஹிந்தரின் ஆட்சியிலும், இவ்வருடம் ஜனவரியில் பதவியேற்ற ரணில் தலைமையிலான அரசும் தொழிலாளர்களுக்கு 7 பர்ச்சஸ் காணி என்பதையே உறுதிப்படுத்திவிட்டன. இரண்டாவது, சம்பள ஒப்பந்த விடயம். தேர்தல் முடிந்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனை விட வேறு விடயங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மலையக வாழ் தமிழர்களின் தனித்துவமிக்க அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் சமூக, கலை, கலாச்சார, பாதுகாப்பு விடயமாகவும் மண்சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் என்ன?
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 1911இல் 13 வீதமாக இருந்த மலையகத் தமிழர்கள் 2011இல் 4.8 வீதமாக குறைந்திருப்பதற்கான சமூக அரசியல் பின்னணி என்னவென ஆராய வழிவகுக்கப்படுமா? இதன் பாதிப்புகள் வெளிக்கொணரப் படுமா? (பெருந்தோட்ட ஆரம்பப் பாடசாலை கள் பிள்ளைகளின் வரவின்றி தொடர்ச்சியாக மூடப்படுகின்றன).
அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்டதும் JEDB, SLSPC, எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றிடமும் பெருந்தோட்டங்கள் நிறுவைக்குக் கொடுக்கப்பட்டன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்தோரின் EPF, ETF பணமான ரூபா 1888 மில்லியனுக்கும் அதிகமான தொகை மிக நீண்டகாலமாக மத்திய வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பணத்தின் உரிமையாளர்களான தொழிலாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன?
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை 1904இல் – 1320, 1980இல் – 668, 1992இல் – 506, 2013இல் – 427 என தோட்டங்கள் குறைந்துகொண்டு வருகின்றன. இதனால், இத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சமூக பாதிப்புகள் பற்றி ஆராயப்படுமா?
தொழிலாளர்களாக 1981இல் – 497,995 பேர், 1992இல் – 376,498 பேர், 2013இல் – 193,412 பேர் எனக் குறைந்துள்ளதோடு, தொழிலாளர்கள் சுயமாகவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான பின்புலங்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றமைக்கான அரசியல் பொருளாதார காரணிகள் கண்டறியப்படவும், இவர்கள் தமது வாழ்விடங்களில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டங்கள் உள்ளனவா?
மேலும், 1995இல் 82,000 ஹெக்டேயராக இருந்த சிறு தோட்டங்க ள் 2012இல் 120,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதோடு, தேயிலை உற்பத்தியில் 70 வீதத்தினை இவர்களே மேற்கொள்கின்றனர். இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். இந்நிலைக்கு 200 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உயர்த்தப்படுவார்களா?
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள மற்றும் நல விடயமாக 2 வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. அதற்காக போலிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை விடுவித்து நிலத்தோடு ஒட்டிய சுயபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வகுத்துள்ள திட்டம் என்ன?
பெருந்தோட்ட தொழிலாளர்களில் 32 வீதமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், 11.4 வீதமானோர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் வாழ்கின்றனர் என்றும் கடந்தகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலை போக்க எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் ஏதும் உண்டா?
பெருந்தோட்டங்கள் தோறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பாடசாலைகளும் உருவாக்கப்படுகின்றன; வரவேற்றகத் தக்கது. இது தொழில் காரணங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இதை யாவரும் அறிவர். இந்நிலையில், வாழ்வின் இறுதிவரை உழைத்து வயதுமுதிர்ந்த நிலையில் ஆதரவற்று இருப்போருக்காக வயோதிப இல்லங்கள் உருவாக்கப்பட திட்டங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டக் கம்பனிகள் தமது பயன்பாட்டிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் காணிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதாவது, 2005 – 2011 காலப்பகுதியில் வருடாந்தம் 1,650 ஹெக்டேயர் காணிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. பெருந் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகக் கூறுகின்ற இக்காலக்கட்டத்தில் காணி சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு பெருந்தோட்ட காணிகளைப் பொறுப்பேற்று பிரதேச செயலர்கள் ஊடாக மலையக மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுமா?
இறுதியாக மலையக மக்களும் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும், உரிமைகளும் கொண்டிருப்பவர்களாக விளங்குகின்றனர். இலங்கை வாழ் மலையக மக்கள் எனும் கௌரவ நிலையை அரசியல் சாசனம் ஊடாக உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
மலையக அரசியல்வாதிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கான சலுகைகளையும் பாதுகாப்பையும் அதிகரித்துக் கொள்வீர்கள். பாதுகாப்புப் படைகளோடு உலாவருவீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் இந்நாட்டின் கௌரவ பிரஜைகளாக வாழ அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கத் தீட்டப்படும் திட்டங்கள் மூலமே உங்களுடைய எதிர்காலம் நிலையானதாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அருட்தந்தை மா. சத்திவேல்
நன்றி: மாற்றம்

Tuesday, August 11, 2015

மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை

1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.

இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.

இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.

நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.

இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.  சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Friday, August 7, 2015

மனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு

மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக  இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை க்கு சரியான தீர்வு பெற்று கொடுப்பதோடு அவர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாம் போராட்டம் நடத்தி அதை பெற்றுகொடுக்க முன்னின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ள சுந்தரலிங்கம் பிரதீப் ஊழல் இல்லாத அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்களை தட்டி கேட்கக்கூடிய தகுதி, இக்கட்சிக்கு  மட்டுமே உள்ளது என்றார்.
'கடந்தகால தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு இன மக்களும் என்றும் இல்லாதவாறு இன்று, மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர். இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ம.வி.மு.இன் பிரதிநிதி ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
'மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ம.வி.மு மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயாராக உள்ளது. இன,மத,மொழி,பேதங்களின்றி ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்' என அழைப்புவிடுத்தார்.

23,500 ரூபா சம்­பளம் என்­பதில் உண்­மை­யில்லை

பெருந்­தோட்டப் பாட­சா­லை­க­ளுக்­கென்று நிய­மனம் பெற்ற உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடு க்­கப்­ப­டு­மாயின் முதலில் மகிழ்ச்­சி­ய­டை­பவன் நானா­கவே இருப்பேன். ஆனால் உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்­ற­டிப்­ப­டையில் கூடுதல் சம்­ப­ள த்தைப் பெற்றுக் கொடுப்­ப­தாகக் கூறி வரு­வது உண்­மைக்குப் புறம்­பா­ன­தா­கு­ மென்று இ.தொ.கா வின் உப தலைவர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்தார்.
 
மடுல்­சீமை, ஊவா பர­ண­கமை, அப்­புத்­தளை போன்ற இடங்­களில் நடை­பெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்­டமான் கலந்து கொண்­பே­சு­கை யில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். தொடர்ந்து அவர் பேசு­கையில்;
 
‘‘கடந்த ஆட்­சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட முயற்­சி­களின் பல­னாக மூவா­யிரம் உதவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்க அரசு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதற்­க­மைய புதிய ஆட்­சயின் போது ஒரு தொகுதி உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. இந்­நி­ய­ம­ன ங்­களில் ஊவா மாகா­ணத்தில் 599 பேர் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்ற அடிப்­ப­டை யில் கூடுதல் சம்­பளம் பெற்றுத் தரு­வ­தாக மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­தி­ருந்தார்.அவ்­வு­தவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கடந்த மாதம் வழங்­கப்­பட்ட சம்­ப­ளமும் வர்த்த மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டி­ருந்­த­ப டியே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்­களுக்கு கூடுதல் சம்­ப­ளத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான எந்­த­வொரு முயற்­சியும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­ப­தாக கூறப்­படும் கூற்­று க்கள் அனைத்தும் உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். புத்­தி­ஜீ­வி­க­ளான ஆசி­ரியர் சமூ­கத்­தையே ஏமாற்­றி­யி­ருக்கும் இவர்கள் பாமர மக்­களை எவ்­வ­கையில் ஏமாற்­று­வார்கள் என்­பது அம் மக்­க­ளுக்கே தெரிந்த விட­ய­மாகும்.
 
கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான உண்மை நிலை­யி­னை­ய­றிய சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அணுகி வின­வி­ய­போது, ‘‘நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்ட உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டுள்ள பிர­காரம், சம்­பளம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. கூடுதல் சம்­பளம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது குறித்து எத்­த­கைய தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை” என்று கூறினர்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆயிரம் ரூபா சம்­பள உயர்­ வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்­பது உறு­தி­யாகும். பெற்றுக் கொடுக்க முடி­யா­விட்டால் இ.தொ.கா. அக் கோரிக்­கையை முன்­வைக்­காது. தோட் டக் கம்­ப­னி­களின் ஆத­ர­வா­ள ர்­க­ளாக செயல்­பட்­டு­வரும் மலை­யக தொழிற்­சங்­கங்கள் சில ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வினை வழங்க மறுக்கும் கம்­ப­னி­யா­ளர்­களை எதிர்க்­காமல் சம்­பள உயர்­வினைப் பெற்றுக் கொடுக்க முனையும் இ.தொ.கா. வை எதிர்க்­கவும், விமர்­ச னம் செய்­ய­வு­மான செயல்­பா­டு­களை மேற்­கொள்­கின்­றனர். பெருந்­தோட்ட மக்கள் குறித்து அக்­க­றை­ யு­டனும் உணர்வு பூர்­வ­மா­கவும் செயற்­ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்­டு­மே­யாகும்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிற் கும் இ.தொ.கா. விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந் நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப் பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என் றார்.

Friday, July 17, 2015

சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் காலா­வதி­யாகி நான்கு மாதங்கள் நிறை­வ­டை­யப்­போ­கின்ற நிலை­யிலும் புதிய கூட்டு உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் தொடர்ச்­சி­யாக தோல்­வி­யையே சந்­தித்து வரு­கின்­றன. பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் தமக்கு நாட் சம்­ப­ள­மாக 1000 ரூபாவை வழங்­கக்­கோரி நிற்­கின்ற நிலையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அதனை நிரா­க­ரித்­து­வ­ரு­கின்­றது. கூட்டு ஒப்­பந்த விவ­காரம் தொடர்பில் இது­வரை ஆறு சுற்று பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­விட்­ட­போதும் அவை தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தன.
முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இது­வரை நடை­பெற்ற நான்கு சுற்று பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. அதன்­ பின்னர் தொழில் அமைச்­சுக்கும் முத­லாளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­தன. அந்­த­வ­கையில் நடை­பெற்ற அனைத்து பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் சார்பில் 1000 ரூபா நாட் சம்­பளம் கோரப்­பட்­டு­வ­ரு­கின்ற போதும் தோட்ட கம்­பனி நிர்­வா­கங்கள் அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்­து­வ­ரு­கின்­றன.
முத­லாளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழில் அமைச்­சுக்கும் இடையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது பெருந்­தோட்­டத்­துறை தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு மொத்த சம்­ப­ள­மாக 700 ரூபாவை வழங்க முன்­வந்­தன. எனினும் தொழி­லா­ளர்கள் சார்பில் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்ட தொழிற்­சங்­கங்கள் கம்­ப­னி­களின் இந்த அறி­விப்பை நிரா­க­ரித்­துள்­ளன.
தொழிற்­சங்­கங்கள் சம்­பள உயர்­வாக 1000 ரூபா­வையே பெற்­றுத்­தர வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலும் 700 ரூபா­வை­விட அதி­க­ரிக்க முடி­யாது என்ற ரீதியில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் பிடி­வாதப் போக்கை கடைப்­பி­டித்­ததால் நான்கு மணி நேரம் நீடித்­தி­ருந்த ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பா­டுகள் இன்றி முடி­வுக்கு வந்­தது.
எனினும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் நிறை­வ­டைந்­ததும் மீண்டும் பேசித் தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­வ­தென முடி­வெ­டுப்­ப­தற்கு இந்த ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலை­மையில் தொழில் அமைச்சில் இடம்­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில் பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம் உள்­ளிட்ட பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள், பெருந்­தோட்ட தொழிற்­சங்க கூட்­ட­மைப்பின் பிர­தி­நிதி, முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் அதி­கா­ரிகள், தோட்ட முகா­மைத்­துவ கம்­ப­னி­களின் நிறை­வேற்று அதி­கா­ரிகள் ஆகியோர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.
அதா­வது தற்­போ­தைய சூழ்­நி­லையில் சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக கம்­ப­னி­க­ளுக்கு நஷ்டம் ஏற்­ப­டு­வ­தா­கவும் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வது இன்­றைய நிலையில் சாத்­தி­ய­மில்லை எனவும் 700 ரூபா­வையே மொத்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என கம்­ப­னிகள் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் கம்­ப­னி­களின் இந்­நி­லைப்­பாட்டை நிரா­க­ரித்­துள்ள பெருந்­தோட்டத் தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம், கம்­ப­னிகள் கொடுக்­கின்ற பணி­களை தொழி­லா­ளர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் முழு­மை­யாக நிறை­வேற்­று­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு வழங்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­ய­துடன் தோட்­டங்­களை இலா­ப­மீட்டும் வகையில் நிர்­வ­கிக்க வேண்­டி­யதும் அபி­வி­ருத்தி செய்­ய­வேண்­டி­யதும் தோட்டக் கம்­ப­னி­களின் பொறுப்­பாகும். அதற்கு தொழி­லா­ளர்கள் பொறுப்புக் கூற­மு­டி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கூட்டு ஒப்­பந்த காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்த நிலையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பொன்றை முத­லா­ளிமார் சம்­மே­ளனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. அந்தக் கோரிக்­கையை பெருந்­தோட்டத்­து­றையின் ஏனைய தொழிற்­சங்­கங்களும் வலி­யு­றுத்­தி­ய­துடன் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்டு வந்­தன. ஆனால் இது­வரை விமோ­சனம் கிடைக்­காமல் உள்­ளது.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தமது உடலை வருத்தி மேற்­கொள்­கின்ற உழைப்­புக்கு ஏற்ற நியா­ய­மான ஊதி­யத்தை பெறு­வதில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் பாரிய போராட்­டத்­தையே நடத்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை காணப்­ப­டு­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெலும்­பாக இருக்கும் தோட்ட தொழி­லா­ளர்­களின் உழைப்­புக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்­காமல் இருப்­ப­தா­னது பெரும் வேத­னைக்­கு­ரிய நிலை­யாகும்.

நாட்டின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யிலும் மக்­களின் சமூக வாழ்க்கை நிலையில் முன்­னேற்­றங்கள் வந்­து­கொண்­டி­ருக்­கின்ற சூழ­லிலும் பெருந்­தொட்ட தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை நிலையும் அவர்­களின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பும் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையில் பய­ணிப்­ப­தா­னது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

அந்த மக்­களின் வரு­மான கட்­ட­மைப்­பா­னது தொடர்ந்தும் பரி­தா­ப­க­ர­மான நிலை­யி­லேயே இருந்துவரு­கின்­றது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டு­வ­ரு­கின்ற போதிலும் அந்த மக்கள் கோரு­கின்ற நியா­ய­மான சம்­பள உயர்வு அவற்றின் ஊடாக வழங்­கப்­பட்­ட­தில்லை. இதனால் பெருந்­தோட்ட மக்கள் மிகவும் பரி­தா­ப­க­ர­மான வாழ்க்­கை­யையே நடத்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய சூழல் நில­வி­வ­ரு­கின்­றது.

பெருந்­தோட்ட மக்கள் வறுமை நிலை­யி­லேயே தமது வாழ்க்கைப் பய­ணத்தைக் கொண்டு நடத்­த­வேண்­டி­யுள்ளதால் பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். தமது பிள்­ளை­க­ளுக்கு சிறந்த கல்­வியை வழங்கி அவர்­களை சமூ­கத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்­டு­வ­ரு­வதில் அந்த மக்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளையும் சிக்­கல்­க­ளையும் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர்.

கல்விப் பிரச்­சினை, சுகா­தாரப் பிரச்­சினை, போக்­கு­வ­ரத்து மற்றும் சமூக வச­தி­யின்மை உள்­ளிட்ட பல சிக்­கல்­க­ளுக்கு பெருந்­தோட்ட மக்கள் முகம்­கொ­டுத்­து­வ­ரு­கின்­­றனர். தமது அன்­றாட வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தற்கு பாரிய திண்­டாட்­டங்­க­ளையே தோட்டத் தொழி­லா­ளர்கள் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர். எனவே தோட்டத்தொழி­லா­ளர்­களின் இந்தப் பிரச்­சி­னையை தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதில் மலையக தொழிற்­சங்க மற்றும் அர­சியல் தலை­மைகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எக்­கா­ரணம் கொண்டும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் நியா­ய­மான சம்­பள கோரிக்­கை­யான 1000 ரூபா விட­யத்தை தொழிற்­சங்க மற்றும் அர­சியல் தலை­மைகள் கைவிட்­டு­வி­டக்­கூ­டாது.

அத்­துடன் இது தோட்டத்தொழி­லா­ளர்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடை­யி­லான பிரச்­சினை என்று கருதி அர­சா­ங்கம் இந்த விட­யத்தில் மௌனப் போக்கை கடை­ப்பி­டிக்­கக்­கூ­டாது. தொழில் அமைச்சு இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை செய்ய முன்­வ­ர­வேண்டும்.

ஏற்­க­னவே தொழில் அமைச்சு முதலா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் இந்த விவ­காரம் தொடர்பில் இரண்டு சுற்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி ஒரு ஆரோக்­கி­ய­மான தலை­யீட்டை மேற்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். ஆனால் இத்துடன் நிறுத்திவிடாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடவேண்டியது அவசியமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் காணப்படுகின்ற துயர்மிக்க வரலாற்றுக்கு முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். அந்த மக்களின் நியாயமான சம்பள அதிகரிப்புக்கு வழிவகுக்கவேண்டியது கட்டாயம். தொடர்ந்து அந்த மக்கள் வேதனையுடன் வாழும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடாது. தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி மக்களின் நியாயமான சம்பள உயர்வை வழங்காமல் விட்டுவிடக்கூடாது. நடைமுறையில் இருந்த கூட்டு உடன்படிக்கை காலாவதியாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வைக்காண அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.


நன்றி- வீரகேசரி

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான  பேச்சுவர்த்தை கடந்த புதன் கிழமை 15-07-2015 கொழும்பு தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நாவின்ன தலைமையில் இடம்பெற்றது. 

பேச்சுவார்த்தையின்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர். 

பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்க முடியுமென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்ததற்கமைய தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 510 ரூபாவாகவும்,; ஊக்குவிப்புத் தொகையாக 40 ரூபாயும் வரவுத்தொகையாக 140 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியுடன் சேர்த்து மொத்தமாக 766 ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளமையை இ.தொ.கா மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை என தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது.   இப்பேச்சுவார்த்தையின் உடன்படிக்கை 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை  ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை  மே 18, மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22,  நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ம்  நடைபெற்றது. இம்முறை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தன. 

இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 06-07-2015 முதல் 1000 ரூபா வை வலியுறுத்தி மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து தோட்ட நிர்வாகங்களும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இறுதிநாள் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா கடந்த ஒருவார காலமாக தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு கோரியதுடன். சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ள கோரியுள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் இதற்கும் இணங்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Saturday, July 11, 2015

தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

கொழும்பில் தொழில் அமைச்சில்  தொழில் அமைச்சின் லோசகர் சி.விமலசேன தலைமையில் நேற்று (10-07-2015) இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையின் போது முடிவுகள் எதுவும் எட்டப்படாததால் மீண்டும் எதிர்வரும் 15-07-2015ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாள் சம்பள அதிகரிப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேற்றைய முக்கிய பேச்சுவார்த்தையிலும் தீர்மானகரமாக இருந்துள்ளனர். 

தனைத் தொடர்ந்து கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும்; வகையிலான உறுதியான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தொழில் அமைச்சு 23 கம்பனிகள் அடங்கிய முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளது. 
மேலும் ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த யோசனைத்திட்டத்தை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாததால் அந்த யோசனையை மீண்டும் சமர்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தொழில் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சி.விமலசேன தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சு சார்பில் தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், செந்தில் தொண்டமான், கே.வேலாயுதம், ராமநாதன், சந்திரசேன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

பெருந்தோட்டங்கள் சார்பில் 23 கம்பனிகளின் பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகள் கலந்து கொண்டனா இதேவேளை பேச்சுவார்த்தை 15ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டங்களில் மெதுவாக வேலைசெய்யும் போராட்டம் தொடரும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது.