தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டடைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார் மேலும் இப் பேச்சுவார்த்தையில் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்ற உள்ளனர் என்றும இப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டொப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய கூட்டொப்பந்தம் செல்லுபடியாகுமென்றும் என்றார் தற்போதைய வாழ்க்கைச்செலவு உயர்வக்கேற்ப தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா முதல் 600 ரூபா வரை அதிகரிக்கப்படவேண்டுமென்று மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Sunday, April 12, 2009
இந்திய அரசு பெருந்தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யும்- இந்திய தூதுவர்
இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களை நான் உடன் பிறப்புக்களாகவும் பெருந்தோட்டத்துறையை நான் முக்கியத்துவமுடையதாகவும் கருதுகிறேன். இந்திய அரசு தொடர்ந்து தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யக் காத்துக் கிடக்கிறது இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்திய அரசு வழங்கிய 20 சிட்டி ரைட் பஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். இப் பஸ் போக்குவரத்து சேவை யாவும் மாணவ, மாணவியர் தமது கல்வி நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றவும், இளைஞர், யுவதிகள் தமது கடமையை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள பேருதவியாக அமையும் என்றார். இந்த பஸ் வண்டிகளைத் தவிர எதிர்காலத்தில் மேலும் 30 பஸ் வண்டிகளை வழங்கி வைக்கவும் தொடர்ந்து இம் மக்களுக்கு உதவிகளை புரியவும் இந்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களை நான் உடன் பிறப்புக்களாகவும் பெருந்தோட்டத்துறையை நான் முக்கியத்துவமுடையதாகவும் கருதுகிறேன். இந்திய அரசு தொடர்ந்து தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யக் காத்துக் கிடக்கிறது இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்திய அரசு வழங்கிய 20 சிட்டி ரைட் பஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். இப் பஸ் போக்குவரத்து சேவை யாவும் மாணவ, மாணவியர் தமது கல்வி நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றவும், இளைஞர், யுவதிகள் தமது கடமையை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள பேருதவியாக அமையும் என்றார். இந்த பஸ் வண்டிகளைத் தவிர எதிர்காலத்தில் மேலும் 30 பஸ் வண்டிகளை வழங்கி வைக்கவும் தொடர்ந்து இம் மக்களுக்கு உதவிகளை புரியவும் இந்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
Saturday, April 11, 2009
சம்பள உயர்வு குறித்து மக்களிடம் கருத்துகள்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்துகளை பெற்று வருவதாகத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறுபட்ட தொகைகளை குறிப்பிடுகின்றன. இந்நிலையில் என்ன அடிப்படையில் அச் சம்பள உயர்வை பெறுவது தொடர்பில் அவர்கள் குறிப்பிடவேண்டும். புதிய கூட்டு உடன்படிக்கை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கம்பனிப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
சம்பள உயர்வை என்ன அடிப்படையில் கோரலாமென்பதை தொழிற் சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் தெரியப்படுத்தவேண்டுமெனவும் கோரியுள்ளார். முதலில் தற்போதைய சூழ்நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை எந்தளவு வழங்குமென்பதை சிந்திக்க வேண்டும். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அரசு என்ன செய்ய வேண்டுமென்பதையும் சிந்திக்க வேண்டும். அதாவது அரச ஊழியர்களுக்கு பொருட்களின் விலை உயரும் போது சம்பளங்களை அரசு உயர்த்துகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டுள்ளனர். எனவே, பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற அரசு விலையுயர்வால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளது.
குறிப்பு:- இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்(பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாகும்)
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்துகளை பெற்று வருவதாகத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறுபட்ட தொகைகளை குறிப்பிடுகின்றன. இந்நிலையில் என்ன அடிப்படையில் அச் சம்பள உயர்வை பெறுவது தொடர்பில் அவர்கள் குறிப்பிடவேண்டும். புதிய கூட்டு உடன்படிக்கை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கம்பனிப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
சம்பள உயர்வை என்ன அடிப்படையில் கோரலாமென்பதை தொழிற் சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் தெரியப்படுத்தவேண்டுமெனவும் கோரியுள்ளார். முதலில் தற்போதைய சூழ்நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை எந்தளவு வழங்குமென்பதை சிந்திக்க வேண்டும். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அரசு என்ன செய்ய வேண்டுமென்பதையும் சிந்திக்க வேண்டும். அதாவது அரச ஊழியர்களுக்கு பொருட்களின் விலை உயரும் போது சம்பளங்களை அரசு உயர்த்துகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டுள்ளனர். எனவே, பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற அரசு விலையுயர்வால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளது.
குறிப்பு:- இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்(பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாகும்)
Friday, April 10, 2009
மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு உதவி தொடரும் -இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா
இந்திய வம்சாவளி மலையக மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு தொடர்ந்தும் வழங்கும். ஏன இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். கண்டி விக்டோரியா மாபேரிதென்ன தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கணினி மைய ஆசிரியவள நிலையத்தில் கணனி தகவல் தொழில் நுட்பம் தொடர்பான இரண்டு மாத வதிவிட பயிற்சியினை முடித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கணனித் துறைக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு கல்வித்துறையில் கணனி தகவல் தொழில் நுட்பத்தினை வளர்க்கும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்
இந்திய வம்சாவளி மலையக மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு தொடர்ந்தும் வழங்கும். ஏன இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். கண்டி விக்டோரியா மாபேரிதென்ன தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கணினி மைய ஆசிரியவள நிலையத்தில் கணனி தகவல் தொழில் நுட்பம் தொடர்பான இரண்டு மாத வதிவிட பயிற்சியினை முடித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கணனித் துறைக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு கல்வித்துறையில் கணனி தகவல் தொழில் நுட்பத்தினை வளர்க்கும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்
மலையக பஸ் சேவை இன்று ஆரம்பிக்கப்படும்
வரையறுக்கப்பட்ட அன்னை கோதை முயற்சியாண்மை கம்பனியின் ஊடாக மலையக மக்களுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் வைபவம் இன்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இடம்பெறுகிறது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் அவர்களும் கலந்து கொள்கிறார். இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்குகிறார்.
வரையறுக்கப்பட்ட அன்னை கோதை முயற்சியாண்மை கம்பனியின் ஊடாக மலையக மக்களுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் வைபவம் இன்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இடம்பெறுகிறது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் அவர்களும் கலந்து கொள்கிறார். இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்குகிறார்.
உரிமைகளை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே சிறந்த மாகாணம் உருவாக்க முடியும்
தமிழ் மக்களுக்கு உரிமைகளும் வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுப்பதன் மூலமே மத்திய மாகாணத்தை சிறந்த மகாணமாக உருவாக்க முடியும் என மத்திய மாகாண சபை ஆளுநரின் கொள்கை விளக்கவுரையின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றழிய மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் உரிமைகளை நன்மைகளை நுவரெலியா மாவட்ட தமிழர்கள் முழுமையாக பெற வேண்டுமானால் நுவரெலிய அம்பேகமுவ பிரதேச சபைகளுக்குப் பதிலாக மேலும் 10 பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டமே அதிக வறுமையான மாவட்டம் என உலக வங்கி அறிக்கையில் வெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வருமான சமநிலை பேணப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். தமிழர் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் இரண்டு மொழி அமுலில் இல்லை. இதனால், மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி ஏற்பட தோட்டங்களில் ஆரம்ப கல்வியை ஏற்படுத்துவதுடன், நவீன வசதியுடனான வைத்தியசாலை வேண்டும். இந்த கொள்கை விளக்க உரையில் காணி பற்றிய விளக்கம் போதாது. காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு வேண்டும். நாமும் இதில் எங்கள் சமூக பங்கினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாய உற்பத்திக்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுவதுடன், சிறந்த மாகாண சபையாக இங்கு மொழி உரிமை சமத்துவம், சகோதரத்துவம் பேணப்பட்டு சமூக துரோகம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
தமிழ் மக்களுக்கு உரிமைகளும் வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுப்பதன் மூலமே மத்திய மாகாணத்தை சிறந்த மகாணமாக உருவாக்க முடியும் என மத்திய மாகாண சபை ஆளுநரின் கொள்கை விளக்கவுரையின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றழிய மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் உரிமைகளை நன்மைகளை நுவரெலியா மாவட்ட தமிழர்கள் முழுமையாக பெற வேண்டுமானால் நுவரெலிய அம்பேகமுவ பிரதேச சபைகளுக்குப் பதிலாக மேலும் 10 பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டமே அதிக வறுமையான மாவட்டம் என உலக வங்கி அறிக்கையில் வெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வருமான சமநிலை பேணப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். தமிழர் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் இரண்டு மொழி அமுலில் இல்லை. இதனால், மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி ஏற்பட தோட்டங்களில் ஆரம்ப கல்வியை ஏற்படுத்துவதுடன், நவீன வசதியுடனான வைத்தியசாலை வேண்டும். இந்த கொள்கை விளக்க உரையில் காணி பற்றிய விளக்கம் போதாது. காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு வேண்டும். நாமும் இதில் எங்கள் சமூக பங்கினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாய உற்பத்திக்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுவதுடன், சிறந்த மாகாண சபையாக இங்கு மொழி உரிமை சமத்துவம், சகோதரத்துவம் பேணப்பட்டு சமூக துரோகம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
மக்களின் நல மேம்பாட்டை அபிவிருத்தி செய்ய யூ.எம்.டி.பி நிறுவனம் வருகை
பெருந்தோட்ட மக்களது நலமேம்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து யூ.எம்.டி.பி என்ற பெயரிலான நிறுவனம் இலங்கை வரவிருப்பதாக மத்திய மகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந் நிறுவனம் 2010ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருந்து தோட்டப்புற மக்களது நலமேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும். குறிப்பாக தோட்டப்புற மக்களது அடிப்படை வசதிகள், குடியிருப்பு அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களது நலமேம்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து யூ.எம்.டி.பி என்ற பெயரிலான நிறுவனம் இலங்கை வரவிருப்பதாக மத்திய மகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந் நிறுவனம் 2010ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருந்து தோட்டப்புற மக்களது நலமேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும். குறிப்பாக தோட்டப்புற மக்களது அடிப்படை வசதிகள், குடியிருப்பு அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)