Friday, April 10, 2009

உரிமைகளை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே சிறந்த மாகாணம் உருவாக்க முடியும்

தமிழ் மக்களுக்கு உரிமைகளும் வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுப்பதன் மூலமே மத்திய மாகாணத்தை சிறந்த மகாணமாக உருவாக்க முடியும் என மத்திய மாகாண சபை ஆளுநரின் கொள்கை விளக்கவுரையின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றழிய மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் உரிமைகளை நன்மைகளை நுவரெலியா மாவட்ட தமிழர்கள் முழுமையாக பெற வேண்டுமானால் நுவரெலிய அம்பேகமுவ பிரதேச சபைகளுக்குப் பதிலாக மேலும் 10 பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டமே அதிக வறுமையான மாவட்டம் என உலக வங்கி அறிக்கையில் வெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வருமான சமநிலை பேணப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். தமிழர் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் இரண்டு மொழி அமுலில் இல்லை. இதனால், மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி ஏற்பட தோட்டங்களில் ஆரம்ப கல்வியை ஏற்படுத்துவதுடன், நவீன வசதியுடனான வைத்தியசாலை வேண்டும். இந்த கொள்கை விளக்க உரையில் காணி பற்றிய விளக்கம் போதாது. காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு வேண்டும். நாமும் இதில் எங்கள் சமூக பங்கினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாய உற்பத்திக்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுவதுடன், சிறந்த மாகாண சபையாக இங்கு மொழி உரிமை சமத்துவம், சகோதரத்துவம் பேணப்பட்டு சமூக துரோகம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments: