Friday, April 10, 2009

மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு உதவி தொடரும் -இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா

இந்திய வம்சாவளி மலையக மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு தொடர்ந்தும் வழங்கும். ஏன இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். கண்டி விக்டோரியா மாபேரிதென்ன தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கணினி மைய ஆசிரியவள நிலையத்தில் கணனி தகவல் தொழில் நுட்பம் தொடர்பான இரண்டு மாத வதிவிட பயிற்சியினை முடித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கணனித் துறைக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு கல்வித்துறையில் கணனி தகவல் தொழில் நுட்பத்தினை வளர்க்கும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்

No comments: