Thursday, July 28, 2016

2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு தீர்­மா­னத்தை இ.தொ.கா.வர­வேற்­கி­றது

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபாவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்றார். இதனை இலங்­கை­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கி­றது. இதே­நேரம் இவ் இடைக்­கால கொடுப்­ப­னவை இரண்டு மாதங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்தி விடாது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் வரை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.
அக்­க­ரப்­பத்­தனை கிளாஸ்கோ நெதர்ஸ்டன், டய­கம வெஸ்ட் முதலாம் பிரிவு ஆகிய பகு­தி­களில் நேற்று புதன்­கி­ழமை பாதை திறப்பு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,தோட்­டத்­தொ­ழி­லா­ள­ருக்­கான நிவா­ர­ண­மாக 2500 ரூபாவை வழங்­கு­வ­தற்கு அர­சா­ங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கின்­றது. எனினும் இந்­தக்­கொ­டுப்­ப­ன­வா­னது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப்படும் வரை வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை இ.தொ.கா. விரும்­பு­கி­றது.
சம்­பள அதி­க­ரிப்­பு ­தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெறும் சந்­தர்­ப்பங்­களில் அது வெற்­றி­ய­ளிக்­காது இருப்­ப­தற்கு குழப்­ப­க­ர­மான செயற்­பா­டு­களில் சில தரப்­புக்கள் ஈடு­ப­டு­கின்­றன. இதுவே சம்­பள அதி­க­ரிப்­பு தாம­த­மா­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.
எவ்­வாறிருப்­பினும் தொழி­லா­ளர்­க­ளு­டைய சம்­பள பிரச்­சி­னையை இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும் என்­பதை யாரும் மறந்து விடக்­கூ­டாது. இ.தொ.கா.வே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வை­பெற்­றுத்­தரும் என்­பதை மக்கள் நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கின்­றனர்.
இம்­முறை தேயிலை விலையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­மையால் நாம் முன்­வைத்த சம்­பள தொகையை பெற்­றுக்­கொள்­வதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. ஆனாலும் நாம் நிர்­ண­யித்த சம்­ப­ளத்தை அடைந்தே தீருவோம்.
இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தாலும் கூட அடுத்த மாதம் முதல் வாரம் அளவில் மீண்டும் ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வி­ரு­க்கின்­றது.
அந்த பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டியும் என எதிர்­பார்க்­கின்றோம். இருந்தும் தொழி­லா­ளர்கள் எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்தை நாம் பெற்றே தீருவோம் என்­பதில் ஐயம் கொள்­ளத்­தே­வை­யில்லை.
சிலர் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்கும் உரி­மை­களில் தலை­யிட்டு தங்­களை வளர்த்து கொள்­வ­தற்­காக மக்­களை திசை திருப்பி வரு­கின்­றனர். ஆனால் காங்­கி­ரஸின் சேவை தொடர்பில் இவர்­க­ளு­க்கு நன்கு தெரியும். எந்த நேரத்தில் எதை பெறு­வார்கள் தொழி­லா­ளர்­களின் உரி­மையை வென்­றெ­டுக்க எவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் எவ்­வாறு செயல்­ப­டு­வார்கள் என்­பதை அறிந்­த­வர்கள் தான் இன்று மக்கள் மத்­தியில் அவர்­களை திசை திருப்­பு­வ­தற்­காக கிளம்பி வந்­துள்­ளார்கள்.
தோட்ட நிர்­வா­கங்கள் தோட்ட காணி­களை காடு­க­ளாக்கிவிட்டு, தொழி­லா­ளர்­குறைப்­பையும் நிகழ்த்தி விட்டு தொழி­லுக்கு வரா­விட்டால் தேயிலை காணி­களை மூடு­வ­தாக அறி­விக்­கின்­றனர்.
அவ்வாறு நடந்தால் கவலைப்பட தேவையில்லை. மூடும் தேயிலை காணிகளை அந்தந்த தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் செல்லலாம். காரணம் இந்த தேயிலை காணிகளை உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள் தான். தம் உழைப்பின் சக்தியை முழுமையாக தேயிலை காணிக்கே செலவழித்து விட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பூர்வீகத்தை இழக்க எமது மக்கள் முட் டாள்கள் அல்ல என்றார்.

No comments: