Tuesday, November 3, 2015

சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தெனி்யாய நகரில் சிறுத்தோட்ட தேயிலை உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடு்த்திருந்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் கொழுந்திற்கு நியாயமான விலையை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய வைத்தியசாலையிலிருந்து பேரணியாக வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தெனியாய பஸ் தரிப்பிடம் வரை சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை தொடர்ந்துள்ளதுடன், இதில் 300க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில்,  கொழும்பில் எதிர்வரும் 6ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

No comments: