Wednesday, October 28, 2015

வெகுவிரைவில் வீடுகளை அமைத்துக் கொடுப்பேன்

மீரி­ய­பெத்தவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட­மைப்­புத்­ திட்டம் முற்­று­மு­ழு­தாக மந்­த­க­தி­யிலே இடம்பெற்று ­வ­ரு­கின்­றது. இதனைத் துரி­தப்­ப­டுத்தி வெகு­வி­ரைவில் அம் மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என ஊவா மாகாண, தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் செந்தில் தொண்­டமான் குறிப்­பிட்டார்.

மாகாண அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்ற அமைச்சர் செந்தில் தொண்­டமான் மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­திக்கும் பொருட்டு அவர்­கள் தங்­கி­யி­ருக்கும் மாக்­கந்தை தேயிலைத் தொழிற்­சா­லைக்கு விஜயம் செய்து அவர்களைச் சந்­தித்து  உரை­யாற்­று­கையில், நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் மாற்றத்தினால் எம்மால் சமூக அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விட்­டது. அக்­காலம் இருள் சூழ்ந்த கால­மா­கவே காணப்­பட்­டது. ஊவா மாகாண சபை­யிலும் இது­போன்ற நிலை­மையே காணப்­பட்­டது.

மத்­திய அரசில் எமக்கு அர­சியல் பலம் இல்­லாமல் இருந்தால் கூட ஊவா மாகாண சபை எனது பொறுப்பில் இருக்கும் அமைச்­சுக்­களைப் பயன்­ப­டுத்தி தடைப்­பட்­டி­ருந்த சமூகப் பணி­க­ளையும் வீட­மைப்­பி­லி­ருந்து வந்த மந்த கதி­யையும் நிவர்த்தி செய்ய முடியும். எனது முதற் பணி மீரி­ய­பெத்­தவில் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் திட்­டத்­தினை துரி­த­மாக நிறைவு செய்­வ­தாகும். வெகு­வி­ரைவில் அவ்­வீ­டு­களை எமது மக்­க­ளுக்கு கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்பேன். ஆகவே மக்கள் சோர்ந்து போகாமல் உற்­சா­க­மாக இருக்­கும்­படி கேட்டுக் கொள்­கின்றேன்.

ஊவா மாகா­ணத்தின் பாட­சா­லைகள், தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் ஆகி­ய­வற்­றுக்­கான பாதை­களை அமைக்கும் வேலைத்­திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வதைப் போன்று ஆகக் கூடிய முன்­னு­ரி­மையை மீரி­யாபெத்த வீட­மைப்புத் திட்டத்திற்கு வழங்குவேன்.

அரசியல் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாமல் இருந்திருக்குமேயானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் புதிய வீடுகளை நாம் கையளித்திருப்போம் என்றார்.

No comments: