Saturday, October 31, 2015

பதுளை மாவட்டத்தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியாக பிரதிநிதிகளை செய்யும் போது பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் சார்பாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகை குறைவடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக தெரிவதாக முன்னாள் பிரதியமைச்சரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவருமான எம்.சச்சிதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சச்சிதானந்தன் மேலும் இதுகுறித்துத் தெரிவிக்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமூலம் அதிகளவான மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தெரிவாகக்கூடிய நிலைமை காணப்பட்டது. எனினும் புதிதாக எல்லை மீள்நிர்ணம் செய்யப்பட்டு புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அநேகமான தொகுதிகளில் மலையக தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.
 
எதிர்காலத்தில் இந்த நிலைமையானது மலையக சுமூகத்தின் இருப்புக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக மலையக மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தொகுதி நிர்ணயத்தின் போது மலையக மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments: