Wednesday, June 24, 2015

20 பேர்சஸ் காணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் தேசிய சமாதான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக சமூகத்தினருக்கு 20 பேர்சஸ் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி நோர்வூட்டில் ஞாயிற்றுக்கிழமை (21); ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு 20 பேர்சஸ்; காணியும் காணி உரித்துடன் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இந்த ஆரப்பாட்ட பேரணி நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்டு நோர்வூட் நகரம் வரை சென்று; நோர்வூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

No comments: