Tuesday, August 19, 2014

வேன் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

ஹப்புத்தளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹப்புத்தளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று தியத்தலாவ காகொல்ல பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த விபத்து நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
விபத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் படுங்காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விபத்து தொடர்பில்   பண்டாரவளை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

No comments: