Tuesday, August 19, 2014

கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தாதிகள் பற்றாக்குறை

கண்டி மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் சுகாதார சேவையில் வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையில் ஈடுபடும் தாதிகள் அடங்களாக 485பேருக்கு பற்றாக்குறை காணப்படுவதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்துள்ளார்.
 
அவர் இது குறித்து மேலும் கூறுகையில் இம்மாவட்ட வைத்தியசாலைகளில் விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் 28, வைத்தியர்கள் 163, வைத்திய சேவையாளர்கள் 294, சத்திர சிகிச்சை வைத்தியர்கள் 5, பொது சுகாதார சேவைகள் அதிகாரிகள் 56, குடும்ப சுகாதார சேவைக்கான தாதிகள் 150 என்ற வகையில் பற்றாக்குறை காணப்படுகின்றது
 
மத்திய மாகாண சபையினால் மத்திய நாட்டு சுகதேகிகள் என்ற கொள்கை திட்டம் மேற்கொள்ளப்பட்ட போதும் இவ்வாறான வைத்திய பற்றாக்குறையினால் அது செயலிழந்து காணப்படுகின்றது என்றார்.

No comments: