Tuesday, July 22, 2014

சிரேஷ்ட ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணம் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் தொழிலுறவு அதிகாரியும் சமூக சேவையாளருமான பீ.இராஜரட்ணம் தனது 78 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (20) நுவரெலியாவில் காலமானார்.

இவர் 1936ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் திகதி பிறந்தார். ஊடகத்துறையில் கடந்த 50 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ், தினகரன் ஆகிய பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றினார். சிறந்த சமூக சேவையாளரும், பிரபல நிறுவனங்கள் பலவற்றின் ஆலோசகராகவும், சட்ட ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸீஸின் காலத்தில் நுவரெலியா காரியாலயத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டார்.

மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட பல முக்கிய தலைவர்களுடன் இவர் நெருங்கிய உறவையும் கொண்டிருந்தார்.

நுவரெலியா கொல்ஃப் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணத்தின் இழப்பு நுவரெலியாவிற்கும், குறிப்பாக ஊடகத்துறைக்கும் பாரிய ஒரு இழப்பாகும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தியாகு தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: