Tuesday, July 22, 2014

'வீட்டுக்கு வீடு' - 'கிராமத்துக்கு கிராமம்' அபிவிருத்தித் திட்டத்துக்கு ரூ.2657 மில்லியன்

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு மற்றும் கிராமத்துக்குக் கிராமம் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக பதுளை மாவட்டத்திலுள்ள 567 கிராம சேவகர் பிரிவில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2,657 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது.
 
இந்த அபிவிருத்தித் திட்டத்தினூடாக பதுளை மாவட்டத்தில் 239,463 குடும்பங்களைச் சேர்ந்த 811,758 பேர் நன்மையடையவுள்ளனர். மேலும் திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 59,273 பேர் நன்மையடையவுள்ளனா இந்த அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்க பதுளை மாவட்ட அரசாங்க  பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புவுது வெல்லச அபிவிருத்தித் திட்டம்- 824 மில்லியன் ருபா, கிராமிய பாடசாலைகளின். சுகாதாரத் திட்டம்.- 54 மில்லியன் ரூபா,  கிராமத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டம்- 840 மில்லியன் ரூபா, வனஜீவராசிகள் மற்றும் தேசிய வளங்கள் பாதுகாப்புத் திட்டம் - 70 மில்லியன் ரூபா,  திவி நெகும அபிவிருத்தித் திட்டம் - 180 மில்லியன் ரூபா, விவசாய அபிவிருத்தித் திட்டம்- 139 மில்லியன் ரூபா உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படவுள்ளன.
பதுளை பிராந்திய மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 175 மில்லியன் ரூபாவும். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு மேலதிகமாக பதுளை மாவட்டத்தில் உள்ள 10 கிராமிய பாலங்கள் ஏற்கனவே புனரமைக் கப்பட்டுள்ளன.
 
2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேலும் 1000 பாலங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

No comments: