Tuesday, February 22, 2011

தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தம்- மனோ கணேசன்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றிய போது ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டபோது

தற்பொழுது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் 30ஆம் திகதி முடிவுக்குவருகின்றது. உண்மையிலேயே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் உள்ளுராட்சி தேர்தலைவிட, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கையெழுத்திடப்படும் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தமே நமக்கு முக்கியமானதாகும். தேர்தல் முடிந்து, 13 நாட்களில் இன்று நடைமுறையில் இருக்கும் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகின்றது என்பதை மனதில்கொண்டு தொழிலாளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் பிரதான பிரச்சார பொருளாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்வைத்திருக்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 405 ரூபாய் சம்பளம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையிலே அவர்களுக்கு கிடைப்பது 285 ரூபாய் மட்டுமே. வேலைக்கு வருகைத்தரும் நாட்களின் அடிப்படையிலான 90 ரூபாவும், 18 கிலோ கொழுந்து எடுக்கவேண்டிய நிபந்தனையின் அடிப்படையிலான 30 ரூபாவும் பெரும்பாளான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. கர்ப்பமடையும் பெண்களுக்கு தொழில் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 15 நாள் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளத்துடன் வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதகமான அம்சங்களை உள்ளடக்கியதுதான் பொருந்தோட்ட சம்;பள உடன்படிக்கையாகும். இத்தகைய மோசடி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க முடியுமா? என்றார்.

No comments: