Tuesday, February 22, 2011

தோட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைக்க உடனடி நடவடிக்கை


பன்வில ஆகல சின்னகந்தக்கட்டி மேற்பிரிவு தோட்டத்தில் குடியிருப்புகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியான தோட்டத்திலுள்ள 39 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆகல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த பாடசாலையை இயங்க வைப்பதற்காகவும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்காகவும் இத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் பழைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தினை தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட விசேட சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை பன்வில கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது. இச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் சின்னபந்தகட்டி தோட்டத்தின் கீழ்ப்பிரிவில் ஆகல அரச பெருந்தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு 20 வீடுகளை கட்ட காணியை வழங்க தீர்மானித்துள்ளது.

No comments: