Tuesday, February 22, 2011

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்


மலையக மாணவர்களின் கல்விக்கு கைக்கொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எட்டியாந்தோட்டை எக்கிலாஸ் தோட்டத்திலுள்ள பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் வித்தியாலயத்திற்காக தளபாடங்களையும் வழங்கவுள்ளது.

கொழும்பிலிருந்து இயங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மலையகத்தில் பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றவேளை பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments: