Thursday, February 24, 2011

யெல்வடன் தோட்ட குடியிருப்புகளில் வெடிப்பு; 115 பேர் பெரும் பாதிப்பு

பதுளை யெல்வடன் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்புகளில் ஏற்பட்ட திடீர் வெடிப்புகளையடுத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக இப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், நிலம் மற்றும் குடியிருப்புகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அச்சம் காரணமாக இந்தக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களை ஹாலி எல பிரதேச செயலாளர் எம்.ஆர்.ரஞ்சித் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு உலருணவுப் பொருட்களை கிரமமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை பதுளையில் ஓரளவு மழை ஓய்ந்துள்ள போதிலும் நிலம் மற்றும் குடியிருப்புகளில் வெடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: