Friday, August 27, 2010

மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும்

மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் இ.தொ.கா தெரிவிக்கின்றது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தும் பொழுது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் பெற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக அவர் கூறினார்


உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறை மாற்றத்தின்படி விகிதாசார முறைமை மாற்றப்பட்டுத் தொகுதி வாரி முறையுடன் விகிதாசார முறையூம் கலந்த ஒரு முறைமையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமென்று இ.தொ.கா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலையக மக்கள் பரந்துபட்டு வாழ்கிறார்கள் எனவே விகிதாசார முறையில் அவர்களடைந்த நன்மைகள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பன பாதித்துவிடக் கூடாது.

மலையக மக்கள் பரந்து வாழும் சூழலுக்கு ஏற்ப புதிய தொகுதி உருவாக்கப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். புதிய தொகுதிகள் உருவாக்கப்படவேண்டிய பிரதேசங்களை அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையால் மலையகப் பெருந்தோட்டப் புறங்களுக்குப் பாதகமான நிலை கிடையாது என்றார்.

ஒவ்வொரு தோட்டத்திலும் மக்கள் செறிந்து வாழ்வதால் அதற்கு ஏற்றவாறு தொகுதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: