Friday, August 27, 2010

மேல் கொத்மலை நீர் மின் பணி


நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகருக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகின்றன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்தத்திட்டத்தின் தலவாக்கலை நீர் அணையிலிருந்து சுரங்கப்பாதை ஊடாக பூண்டுலோயா நியாங்கந்துர மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

13 கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப் பாதையின் நிர்மாணப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் 150 மெகாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மேல் கொத்மலைத் திட்டத்தினை முன்னிட்டு தலவாக்கலை பிரதேசத்தில் புதிய குடியிருப்புக்கள், கட்டிடங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகள் அடுத்த வருடம் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: