Sunday, July 25, 2010

புசல்லாவையில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்


மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது.

பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது.

குறிப்பாக புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக் காலத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டும் மேலும் இருவர் கழுத்தில் தூக்கிட்டும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலுமொரு மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தான் காரணமென்று சில தரப்புக்கள் நியாயம் கூறி, சமூகத்தின் பார்வையைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றஞ்சாட்டும் நிலவுகின்றது.

No comments: