Monday, December 14, 2009

பாரிய மண்சரிவினால் மக்கள் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசம் நல்லமலை கிராம சேவகர் பிரிவு, ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் ஏறட்ட பாரிய மண்சரிவு காரணமாக அப் பகுதியில் சுமார் 35 தோட்டக் குடியிருப்புக்களில் வாழ்ந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடியிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இம் மணிசரிவு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்

No comments: