Sunday, December 13, 2009

சர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி


சர்வதேச தேயிலை தின மாநாடு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு 2005ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது. அன்றையத் தினம் சர்வதேச தேயிலை தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி செய்யும் எல்லா நாடுகளும் மேற்படி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பரப்புரை செய்து வருகின்றன.

தொழிலாளர்களின் வேதன உயர்வு, வீட்டுரிமை, கல்வி, நிலவுரிமை, சுகாதாரம், கலாசாரம், பெண்கள் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை அட்டனில் நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் ஐக்கிய நாட்டுச் சபையின் அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இணைந்து தயாரித்த பெருந்தோட்ட சமூக பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

சர்வதேச தேயிலை தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்தளை நகரிலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான மண்டபத்திலும் நடைபெறும் என்று பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் இணைப்பாளர் எஸ். முருகையா தெரிவித்தார்

No comments: