Sunday, August 16, 2009

சிறுமிகளின் மரணத்துக்கு எதிராக நியாயம் கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு அதி உயர் பாதுகாப்புவலயமான பௌத்தாலோக மாவத்தை கழிவு வாய்க்கால் பகுதியில் மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மஸ்கெலியா, லக்ஷ்பான பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சுமதி, ஜீவராணி ஆகியோர் மரணத்துக்கு எதிராக மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவர் தொழிலாளர்கள் ஊக்குவிப்புக்கு எதிராகவும், மரணமடைந்த சிறுமிகளுக்கு நியாயம் கோரியும் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், மனிதவள அபிவிருத்தி தாபனம், பிரிடோ நிறுவனம்,மொள்லார் நிறுவனம், ஹாய்ஸ் நிறுவனம், சிப்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், செங்கொடி சங்க உறுப்பினர்களும், அப் பிரதேசங்களை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், பெருந்தோட்ட மாணவர்களை தலைநகர கூலிகளாக்கும் நடவடிக்கைகளும்,அதன் முகவர்களுக்கு எதிராகவும் ஏற்படுத்தப்பட்ட பதாகைகளும் கோஷங்களும் எதிர்ப்பின் வெளிப்பாடுகளாக காணப்பட்டன.ஏற்பாட்டு நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டாலும் குரல் கொடுக்க தலைவர்களுக்கும் மக்கள் நன்றி சொல்லி இவ்வாறான நடவடிக்கைகள் “சிறுவர் தொழிலாளர்” அதிலும் குறிப்பாக மலையக சிறுவர்களை கிள்ளுகீரைகளாக நினைத்து தொழில் கொள்ளும் முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தலைநகரில் தொழில் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மலையக இளைஞர் யுவதிகள் மலையகத்திலே தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் தலைவர்களை மக்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments: