Sunday, August 16, 2009

யுவதிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு: செப்டெம்பர் 11 இல் விசாரணை

கொழும்பில் பௌத்தாலோக மாவத்த கருவாத்தோட்டம் கழிவு வாய்க்கால் ஒன்றில் மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மஸ்கெலியா சென். அன்றூ தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்கள் நேற்று (27) தோண்டியெடுக்கப்பட்டன.


கொழும்பு நீதவான் மன்றின் நீதவானின் உத்தரவுக்கமைய ஹட்டன் நீதவான் மன்றின் நீதவான் சந்துன் விதான முன்னிலையில் சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிகப் பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சடலத்தைத் தோண்டியெடுத்தபோது கொழும்பு கறுவாத்தோட்டப் பொலிஸாருடன் மஸ்கெலியா, நல்லதண்ணி, நோர்வூட், ஹட்டன் பொலிஸ் நிலை உத்தியோகத்தர்களும் வந்திருந்தனர்.யுவதிகள் மரணம் தொடர்பான வழக்கில் இலவசமாக ஆஜராகும் சட்டத்தரணிகள் கு. தம்பையா, கைலாசமூர்த்தி உள்ளிட்டோரும், நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேரும் வந்திருந்தனர்.


சடலங்கள் இன்று (28) மேலதிகப் பரிசோதனை நிறைவடைந்ததும் மீண்டும் மஸ்கெலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: