Monday, August 31, 2009

சிறுமியை வேலைக்கமர்த்திய வீட்டு உரிமையாளருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியாவைச் சேர்ந்த மதுரைவீரன் ஜீவராணி (13) சிறுமியை வேவைலக்கமர்த்தியிருந்த பௌத்தாலோக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வேலைக்கமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் வீட்டு உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரைவீரன் ஜீவராணி மற்றும் லெட்சுமன் சுமதி ஆகிய இரு சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள கழிவு நீர்க்கால்வாயில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: