Monday, June 29, 2009

அடைமழையால் வெள்ளப்பெருக்கு, மணிசரிவி அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய அடை மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் நிரம்பிக் காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படுமென இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, சில இடங்களில் மண்சரிவு ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் கெட்டேதென்ன என்னுமிடத்தில் கடந்த 27-06-2009 மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இரு பெண்கள் படுகாயமடைந்து காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில். ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இப்பகுதி மக்களுக்கு மண்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரத்தினபுரி எல்லாவெல மகா வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள மலை சரிந்து வருவதாக எகலியகொடை பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர். அடை மழை காரணமாக இந்த மலையின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளதால். இப்பகுதியிலுள்ள சுமார் 14 குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு எல்லாவெல மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா

No comments: