Monday, May 25, 2009

பேச்சுவார்த்தையின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் - சென்னன்

கூட்டு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவர் ரி.வி. சென்னன் பதுளை காரியாலயத்தில் தமது தொழிற்சங்க முக்கியஸ்தர்களுடன் பேசும் போது தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பனவாக அமைய வேண்டும். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர்களை பாதித்துள்ள போதிலும் ஒப்பந்தத் துடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றன. இவை இரகசியமாகவே நடை பெற்றுள்ளன. பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்கள் பூரணமாகவே மறைக்கப்பட்டுள்ளன. இச் செயற் பாடுகள் எமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியி ருக்கின்றது. பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். தொழிலாளர்களின் சம்பளத்தில் பகுதி பகுதியாக உயர்வினை ஏற்படுத்தாமல் 300 ரூபா என்ற அடிப்படையிலாயினும் அடிப்படைச் சம்பள உயர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். அச்சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கமைய பகுதி பகுதியாக சம்பள உயர்வு இடம்பெறல் வேண்டும்.

No comments: