Monday, May 25, 2009

மஸ்கெலியா சாமிமலை வீதியில் மண்சரிவு அபாயம்

மஸ்கெலியா நகரில் சாமிமலை வீதியில் மேற்குப் புறமாக வீட்டு மனைகள் அமைப்பதற்காக பாரிய மண் திட்டுகள் டோசர்கள் மூலம் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சிலவற்றில் பாரியளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அம்பேகமுவ பிரதேச சபை முதல்வர் இவற்றை நேரில் பார்வையிட்டதையடுத்து அங்குள்ள மக்களை வேறு இடங்களில் தங்குமாறு பணித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: