Wednesday, April 29, 2009

நிவாரணப் பொருட்கள் சேகரிக்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம்

வன்னி மோதல் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை தீhர்மானித்துள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். நேற்று(28-04-2009) திங்கட்கிழமை இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை அமர்வின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து சேகரிக்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

No comments: