Tuesday, February 23, 2016

இந்திய வம்சாவளியினர் இந்நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமனி நுவரெலியாவில் இடம்பெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழு அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கை பாராளுமன்றம் இரண்டு சபைகளை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது சபையில் அந்தந்த சமூகங்கள் சம்பந்தமான விடயங்கள் வரும் பொழுது அந்தந்த சமூக அங்கத்தினர்களின் அனுமதியுனேயே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

பிரஜாவுரிமை சட்டத்தில் இவ்வாறு இருந்திருக்குமானால் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்திருக்க முடியாது எங்களுக்கென்று ஒரு மாகாணம் அல்லது மாநில அலகு அவசியமாகின்றது. 

இந்த முறைமை பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் இடத்தில் மாத்திரமல்லாமல் வவுனியா அல்லது சிலாபம் அக்குரஸ்ஸ, தெனியாய போன்ற ஏனைய பகுதிகளையும் உள்­ளடக்கியதாக அமைய வேண்டும். மலையக மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்களும் அந்த மாநில அமைப்பில் பங்குகொள்ளக் கூடியதாக ஒரு சபையை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு மத சார்பற்ற நாடாகவும் பல இனங்கள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல மொழிகள் பேசுகின்ற மக்களை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும். தமிழிலே இலங்கை குடியரசு நாடு என்று குறிப்பிட வேண்டும் என்றார்.

இலங்கையில் வாழும் மக்களாக சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலேயர்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களையும் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மலையக மக்களை குறிக்கும் இந்திய தமிழர் என்ற பதம் மாற்றப்பட வேண்டும். 

ஏனைய தேசிய இன மக்களோடு சமமாக மலையக மக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் 

கடந்த காலம் தொடக்கம் இன்றுவரை இந்திய வம்சாவளி சமூகம் பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருவதால் இவர்களுக்கென விசேட ஏற்பாடு கொண்டுவரப்படல் வேண்டும் நீதி, நிர்வாக சம்பந்தமான பதவிகளுக்கு ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவதை போல மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்றார். 

இந்திய அரசிலமைப்பு அரசியல் சட்;டத்தில்; 25,26,30,40 ஆகிய சரத்துக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், இலங்கை அரசியல் யாப்பு சட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார் புத்திரசிகாமணி

Friday, February 19, 2016

ஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு

ஊவா மாகா­ணத்தில் தமிழ் கல்­விக்­கென்று தனி­யா­ன­தொரு அலகு ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் தமிழ்க் கல்­வித்­து­றையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை எதிர்­கொள்ள முடி­யு­மென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசு­கையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்­வித்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில், கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொண்டு, அத­ன­டிப்­ப­டையில் செயல்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்டேன். கடந்த ஒரு மாத­கா­ல­மாக எடுத்த முயற்சி, தற்­போது பய­ன­ளித்­துள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கல்­வித்­து­றைசார் சக­லரும் பங்கு கொண்­டி­ருப்­பது கண்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

மாகா­ணத்தின் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­படும் கடி­தங்கள் மற்றும் சுற்­ற­றிக்­கைகள் அனைத்தும் தமிழ் மொழி­யி­லேயே அமைய வேண்­டு­மென்று, எம்மால் விடுக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்கு, தற்­கா­லிகத் தீர்­வு­களே கிடைக்­கின்­ற­தே­யன்றி, நிரந்­தரத் தீர்­வுகள் கிடைப்­ப­தில்லை. ஒரு சில கடி­தங்கள் தமிழ் மொழியில் அனுப்­பப்­பட்­டாலும், காலப் போக்கில் அது செயல்­ப­டு­வ­தில்லை.

மாகாண தமிழ்க் கல்­வியில் ஏற்­படும் பின்­ன­டைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­தற்கு காரணம். தமிழ்க் கல்­வித்­து­றையும் வளர்ச்சி பெற்­றி­ருக்­கு­மே­யானால், நாட்டின் இரண்டாம் இடத்­திற்கு, ஊவா மாகாணம் வந்­தி­ருக்கும் என்றார்.

அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும், ஊவா மாகாண தமிழ் கல்­வித்­து­றைக்கு பொறுப்­பா­ள­ரு­மான ஆ.கணே­ச­மூர்த்தி தம­து­ரையில், பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்கும் மாணவர் தொகையில் அதி­க­ரிப்பு இடம்­பெ­ற­வேண்­டி­யது அதி­முக்­கி­ய­மாகும். அந்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த அதிபர், ஆசி­ரி­யர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுடன் செயல்­படல் வேண்டும்.

தமிழ்­மொழி மூலம் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யொன்று அமைய வேண்­டி­யதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.

அபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை

பிரித்தானிய கம்பனிகள் நிர்வகித்த காலம் முதல் இன்றைய கம்பனிகள் நிர்வகிக்கும் காலம் வரை மலையக பெருந்தோட்டங்களின் உள்ளக பாதைகளை அமைக்கும் பொறுப்பினை தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைக்கும் பணியை செய்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலகராஸ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் 

முன்பு அபிவிருத்திக்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் பணியாற்றுவதில்லை.  புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் கார்பட் வீதிகளாக மாற்றியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்றார். அபிவிருத்தி பணிகளுக்கு தோட்ட நிர்வாகங்களை தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை. 

பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை நாம் வேண்டி நின்றதும் அதேபோல்அரச நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளுக்கு அரச சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார். மஸ்கெலிய பிரதேசமக்கள் தங்களது அரச தேவைகளுக்காக கினிகத்தேன வரை செல்வதற்கு பதிலாக அதனை நோர்வூட் நகர பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதான வேலைகளை முன்னெடுத்து  வருகிறோம். 

சம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும்

இலங்கையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான புதிய சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள கொடுப்பனவுச் சட்டம் பொதுச் சட்டமாகக் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணியாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரி அந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பில் அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில் நியாயமற்ற விதத்தில் வீட்டுப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் சரியான முறையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு போதுமானதல்ல என்ற காரணத்தினாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், வீட்டுப் பணியாளர்களை ஏனைய தொழிலாளர்களை போன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கென தனியான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. தொழிலாளர்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நியமங்களையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று வீட்டுப் பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறுகின்றது.

'உள்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கென சட்ட ரீதியான குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இல்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் இதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றன' என்றார் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மேனகா கந்தசாமி.

'அவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில், வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இந்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்' என்றார் மேனகா கந்தசாமி.இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் மேனகா கந்தசாமி கூறினார்.

Thursday, February 18, 2016

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் கோப்புகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அதனை செய்யாமல் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கூட்டம் நடைபெறுவதில் எவ்வித பயனும் இல்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் (15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
(15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்திற்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணயாக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர சபை, நகர சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இந்த தீர்மானத்தை சபைக்கு முன்வைத்தார்.
குறித்த காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது பெருந்தோட்ட மக்கள் தமது கலைகலாச்சார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர். எனவே இதற்கு அருகாமையில் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது பொறுத்தமற்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே அதனை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இந்த சபையின் ஊடாக ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.இதனை தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு இந்த காந்தி மண்டபத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது பொறுத்தமாக இருக்கும் என தனது கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து இதனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
நானுஒயா டெஸ்போட் சுற்றுவட்ட பாதை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது இந்த சுற்று வட்ட பாதை வழியாக பேருந்துகள் பயணிப்பதில்லை எனவும் பேருந்துகள் அனைத்தும் குறுக்கு வழியாக செல்வதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலளார் எலன் மீகஸ்முல்ல தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்கு தேசிய போக்குவரத்து அதிகாரசபையும் ஹட்டன் போக்கு வரத்து சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினை தற்பொழுது தீhக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.எனவே இது தொடர்பாக நானுஒயா பொலிஸ் நிலையத்திற்கு ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

Saturday, February 13, 2016

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில்  சம்பள கட்டளைகள் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்                                   

மேலும் தெரிவிக்கையில், தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக அரசு கூறுகின்றது. இந்தச் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தச் சம்பள அதிகரிப்பானது 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, தனியார்துறையினருக்கான சம்பள அதிகரிப்பில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யவுள்ளதாக அரசு கூறுகிறது.
இந்தச் சம்பள அதிகரிப்பு பற்றி அரசு தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏனெனில், இந்த விடயத்தில் அரசு மூடிமறைத்து செயற்படுகின்றது. மலையக மக்கள் விடயத்தில் ஏன் இவ்வாறு அநீதியாக செயற்படுகின்றீர்கள்?

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களிற்கு உழைப்பிற்குரிய சம்பளத்தை வழங்கவேண்டும்

தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நாளொன்றுக்கு 500 ரூபா சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி, சரியான வாழ்வாதார முறையின்றி மலையக தோட்ட தொழிலாளர்கள் லயன் அறைகளில் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ப சம்பளம் வழங்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன சரியான முறையில் வங்கியில் இடப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

வேலையை விட்டு விலகிச் செல்லும் போது ஊழியர் சேமலாப நிதியை அவர்களால் சரியான முறையில் பெற முடிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான கண்காணிப்புக்கள் சரியான முறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கமொன்றின் விலையே ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டும். புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற போதும் தனியார் மற்றும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போது அத்தரப்பினருக்கு உட்பட்ட வகையில் உரிய கொடுப்பனவு கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. 500 ரூபா கொடுப்பனவில் அவர்களிகன் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குள் தினமும் முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அவர்கள் வாழ்வதற்கான வீடுகள் காணிகள் கூட இல்லாது பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். இந்நாட்டில் பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நான்கு ஆண்டுகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்புக்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதுடன் மேலும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

அரவிந்த குமார் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றுகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்த வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.

1992ம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வாழ்க்கைச் செலவு படி அதிகரிக்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சிறு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.

அவ்வாறு இல்லாமல் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இன்று கூடுதல் சம்பளத்தை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களையும் உயர்த்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியதாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருகின்றேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்

மகிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றார். மலையக மக்களும் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் குரல் கொடுக்காமல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தமிழ் மொழியில் தமது கோரிக்கைகளை மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Friday, February 12, 2016

அலட்சியம் வேண்டாம் வேதனையளிக்கிறது

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் இது­வரை கைச்­சாத்­தி­டப்­ப­டாத நிலையில் அந்த மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான கூட்டு ஒப்­பந்­தத்தை உரு­வாக்கும் நோக்கில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போதும் அனைத்து பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாதாந் தம் 2500 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த விட­யத்தில் தலையிட்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். அர­சாங்கம் தலை­யிட்­டி­ருந்­தாலும் ஒன்றும் நடக்­க­வில்லை. ஏற்­க­னவே இருந்த கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாக தற்­போது ஒரு வருடம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்ற நிலையில் இன்னும் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட முடி­ய­வில்லை.

நாட்டின் ஏனைய தொழிற்­து­றை­யினர் பெறு­கின்ற சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான சம்­ப­ளத்­தையே தோட்டத் தொழி­லா­ளர்கள் பெறு­கின்­றனர். அவர்கள் தமக்கு அதி­க­ரித்­துக்­கொ­டுக்­கு­மாறு கோரி­யி­ருக்கும் சம்­பளத் தொகையும் நியா­ய­மா­ன­தா­கவே உள்­ளது. அந்த தொகைக்­கூட நாட்டின் ஏனைய துறை­யினர் பெறும் சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறை­வா­ன­தாகும்.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்கு வழி வகுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தை இது­வரை கைச்­சாத்­தி­டாமல் இருப்­ப­தா­னது ஒரு வகையில் அந்த மக்­களின் உரி­மை­களை மீறு­வ­தா­கவே அமைந்­துள்­ளது.

குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெலும்­பாக இருக்­கின்­றனர். ஆனால் அவ்­வாறு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு முது­கெலும்­பாக இருக்கும் மக்­க­ளுக்கு ஒரு­வ­ருட கால­மாக சம்­பள உயர்வை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் இது எந்­த­ளவு தூரம் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என்­பது புரி­கின்­றது.

எனவே அர­சாங்கம் இந்த விட­யத்தில் அலட்­சி­யப்­போக்கில் இருக்­க­வேண்டாம். குறிப்­பாக தொழிற்­சங்­கங்­களும் முத­லாளி மார் சம்­மே­ள­னமும் இதனை பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அர­சாங்கம் இருந்­து­வி­டக்­கூ­டாது.

விசே­ட­மாக புதிய அர­சாங்­கத்­துக்கு தோட்டத் தொழி­லா­ளர்கள் பாரிய நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனினும் இந்த அர­சாங்­கமும் அந்த மக்­களின் இந்த பிரச்­சினை தொடர்பில் அலட்­சி­யப்­போக்­குடன் இருந்­து­வி­டக்­கூ­டாது. உட­ன­டி­யாக இந்த விட­யத்தில் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­க­வேண்டும்.

மேலும் மலை­யக அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­த­வேண்டும். வர­லாறு முழு­வதும் தோட்டத் தொழி­லா­ளர்கள் பல்­வேறு விட­யங்­களில் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளனர்.

குறிப்­பாக சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு வச­திகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே அந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் தற்போது உரிய முறையில் சம்பள உயர்வுக்கூட வழங்கப்படாமல் உள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். இது வேதனையளிக்கும் விடயமாகும். வேதனை தொடர்வதற்கு இடமளிக்கவேண்டாம்.