பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு தமிழ்மொழிமூல பாடநெறிகளுடன் தொழிற்பயிற்சி
பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாடநெறிகளுடன் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதுளைப் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் ரம்யமான முறையில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் சிங்கள மொழிமூலமான பாடநெறிகளுடனேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், பெரும்பான்மை சமூக இளைஞர், யுவதிகளுக்கே கூடுதலான வாய்ப்புக்கள் இருந்து வந்தன. எமது சமூகத்தவர்களுக்கு அவ்வாய்ப்புக்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையினால், எமது சமூக இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.
இதுகுறித்து, வாழ்க்கை தொழில்பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களின் இளைஞர், யுவதிகளிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆரம்பக்கட்டமாக 75 இளைஞர்களை தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுத்தியுளள்ளதாகவும் தெரிவித்தார்
Friday, March 27, 2009
ருபெல்லாவின் தாக்கம் மலையகத்திலும் பரவாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும்
ருபெல்லா தடுப்பூசியின் தாக்கம் மலையகப் பாடசாலைகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யவேண்டுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளையில் ருபெல்லா ஊசி ஏற்றப்பட்டதால் மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மாணவியின் மரணம் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே மாத்தறை பகுதி பாடசாலையொன்றில் ஏற்பட்ட மாணவி ஒருவரின் மரணம் தொடர்பாக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அட்டன் பகுதியில் ஒரு மாணவியின் மரணத்திலும் ருபெல்லா தடுப்பூசி விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.
பெருந்தோட்டத் துறையைப் பொருத்தவரையிலும் மாணவர்களின் சேம நலன்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்கு போதிய ஓய்வும் இல்லை. நோய்களின் தாக்கங்களை உடனடியாகக் கண்டு கொள்ளும் அளவிற்கு அனுபவமும் இல்லை. இதற்கும் மேலதிகமாக வைத்திய வசதிகளும் எமக்கு பூரணமாக இல்லை. ஆகவே பாடசாலை நிர்வாகமும் சுகாதாரத் திணைக்களமும் இவ்விடயத்தில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். மலையகத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இம் மாதிரியான ஆபத்துகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
ருபெல்லா தடுப்பூசியின் தாக்கம் மலையகப் பாடசாலைகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யவேண்டுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளையில் ருபெல்லா ஊசி ஏற்றப்பட்டதால் மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மாணவியின் மரணம் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே மாத்தறை பகுதி பாடசாலையொன்றில் ஏற்பட்ட மாணவி ஒருவரின் மரணம் தொடர்பாக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அட்டன் பகுதியில் ஒரு மாணவியின் மரணத்திலும் ருபெல்லா தடுப்பூசி விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.
பெருந்தோட்டத் துறையைப் பொருத்தவரையிலும் மாணவர்களின் சேம நலன்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்கு போதிய ஓய்வும் இல்லை. நோய்களின் தாக்கங்களை உடனடியாகக் கண்டு கொள்ளும் அளவிற்கு அனுபவமும் இல்லை. இதற்கும் மேலதிகமாக வைத்திய வசதிகளும் எமக்கு பூரணமாக இல்லை. ஆகவே பாடசாலை நிர்வாகமும் சுகாதாரத் திணைக்களமும் இவ்விடயத்தில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். மலையகத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இம் மாதிரியான ஆபத்துகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
Thursday, March 26, 2009
சம்பள உயர்வு கோரிக்கைக்கு கையெழுத்து வேட்டை – ஆர்.எம். கிருஷ்ணசாமி
தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி தொழிலாளர்களின் கையெழுத்து பெற்று மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுவரை ஊவா மாகாணத்தில் 10,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இம் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைகிறது. குறிப்பாக அடிப்படை சம்பளமென்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்றும் ஒரே துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வௌ;வேறு தொகையான சம்பளம் வழங்கப்படுகிறது. 24 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் ரூபா 200, ஊக்குவிப்பு போனஸ் ரூபா 70, நாணயமாற்றுக் கொடுப்பனவு ரூபா 30 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு மாதமொன்றுக்கு ரூபா 6960 சம்பளம் கிடைக்க வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக ஒரு தொழிலாளி 23 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் 200 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனவே மாதமொன்றுக்கு ரூபா 4370 மாத்திரமே ஒரு தொழிலாளி பெற்றுக்கொள்கின்றார். ஒரு தொழிலாளி ஒரு நாள் வேலையை இழந்தால் கம்பனிகள் இலாபமாக 2590 ரூபாவை பெறுகின்றன. இது தொழிலாளர்களுக்கு மிகப் பாதகமாக அமைகிறது.அத்துடன் அடிப்படை சம்பளம் 200 ரூபாவுக்கு மட்டுமே. ஊழிய சேமலாபநிதி, போனஸ், மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த ஒப்பந்தத்திற்கு பின் வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் விரோத சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி இன்றை வாழ்க்கை செலவுக்கு ஏற்ப தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். அது அரசாங்கம் தலையிட்டால் மாத்திரமே வெற்றி பெறும் என்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி தொழிலாளர்களின் கையெழுத்து பெற்று மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுவரை ஊவா மாகாணத்தில் 10,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இம் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைகிறது. குறிப்பாக அடிப்படை சம்பளமென்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்றும் ஒரே துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வௌ;வேறு தொகையான சம்பளம் வழங்கப்படுகிறது. 24 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் ரூபா 200, ஊக்குவிப்பு போனஸ் ரூபா 70, நாணயமாற்றுக் கொடுப்பனவு ரூபா 30 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு மாதமொன்றுக்கு ரூபா 6960 சம்பளம் கிடைக்க வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக ஒரு தொழிலாளி 23 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் 200 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனவே மாதமொன்றுக்கு ரூபா 4370 மாத்திரமே ஒரு தொழிலாளி பெற்றுக்கொள்கின்றார். ஒரு தொழிலாளி ஒரு நாள் வேலையை இழந்தால் கம்பனிகள் இலாபமாக 2590 ரூபாவை பெறுகின்றன. இது தொழிலாளர்களுக்கு மிகப் பாதகமாக அமைகிறது.அத்துடன் அடிப்படை சம்பளம் 200 ரூபாவுக்கு மட்டுமே. ஊழிய சேமலாபநிதி, போனஸ், மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த ஒப்பந்தத்திற்கு பின் வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் விரோத சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி இன்றை வாழ்க்கை செலவுக்கு ஏற்ப தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். அது அரசாங்கம் தலையிட்டால் மாத்திரமே வெற்றி பெறும் என்றார்.
கம்புறுப்பிட்டியவில் ஏழுபேர் கைது
கம்புறுப்பிட்டிய நகரில் கடந்த 23-03-2009 அன்று பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காலி, தெனியாய பகுதிகளின் தோட்டங்களை சேர்ந்த நான்கு இளைஞர்களும் மூன்று யுவதிகளையும் பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இவர்களில் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாத காரணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கம்புறுப்பிட்டிய நகரில் கடந்த 23-03-2009 அன்று பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காலி, தெனியாய பகுதிகளின் தோட்டங்களை சேர்ந்த நான்கு இளைஞர்களும் மூன்று யுவதிகளையும் பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இவர்களில் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாத காரணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Thursday, March 19, 2009
மலையக மாணவர்களின் புலமைபரிசில் கொடுப்பனவு பெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரிட்டோ நிறுவனம்
புலமைப் பரிசில் பெற தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் வருமான எல்லையை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படையில் பெருந்தோட்ட மாணவர் நிலை குறித்து ஆராந்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது பற்றி பிரிடோ நிறுவனம் விடுத்த வேண்டுகோளில் எமது நாட்டில் கல்வித் துறையில் அதிகமாக பின்தங்கிய மக்கள் பெருந்தோட்டத்துறையை சார்ந்த மலையக மக்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.
இவ்வாறு பின்தங்கிய நிலை காரணமாக மலையக பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பல்கலைகழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஏனைய பிரதேச மாணவர்களோடு ஒப்பிடும் போது மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு
இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் மலையகத்தில் கல்வித்துறையில் மலையகம் முன்னேற்றமடைய அதிக காலம் எடுப்பதால் மலையக மாணவர்களுக்கு அதிக ஊக்குவிப்பு வழங்க வேண்யது அவசியமாகும். (மலையக பெற்றோரின் வருமானம் வருடத்துக்கு 24,000 இலிருந்து 54,000 ரூபா வரையில்- மாத வருமானம் 2,000 ரூபாவிலிருந்து 4,500 ரூபா) இன்றைய நிலையில் அதிக வருமானம் பெருபவர்களின் பிள்ளைகள் கூட புலமை பரிசில் கொடுப்பனவை பெறுகின்றனர். ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.
பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக தமது படிப்பினை முன்னெடுக்க முடியாத நிலை. இப் பிள்ளைகள் புலமை பரிசில் கொடுப்பனவை பெற வேண்டுமானால் விசேட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை உறுதி செய்வதற்கு மாற்று வழிகளை மேற்கொள்வதற்கு மலையக அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றில் கல்வி அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
புலமைப் பரிசில் பெற தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் வருமான எல்லையை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படையில் பெருந்தோட்ட மாணவர் நிலை குறித்து ஆராந்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது பற்றி பிரிடோ நிறுவனம் விடுத்த வேண்டுகோளில் எமது நாட்டில் கல்வித் துறையில் அதிகமாக பின்தங்கிய மக்கள் பெருந்தோட்டத்துறையை சார்ந்த மலையக மக்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.
இவ்வாறு பின்தங்கிய நிலை காரணமாக மலையக பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பல்கலைகழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஏனைய பிரதேச மாணவர்களோடு ஒப்பிடும் போது மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு
இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் மலையகத்தில் கல்வித்துறையில் மலையகம் முன்னேற்றமடைய அதிக காலம் எடுப்பதால் மலையக மாணவர்களுக்கு அதிக ஊக்குவிப்பு வழங்க வேண்யது அவசியமாகும். (மலையக பெற்றோரின் வருமானம் வருடத்துக்கு 24,000 இலிருந்து 54,000 ரூபா வரையில்- மாத வருமானம் 2,000 ரூபாவிலிருந்து 4,500 ரூபா) இன்றைய நிலையில் அதிக வருமானம் பெருபவர்களின் பிள்ளைகள் கூட புலமை பரிசில் கொடுப்பனவை பெறுகின்றனர். ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.
பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக தமது படிப்பினை முன்னெடுக்க முடியாத நிலை. இப் பிள்ளைகள் புலமை பரிசில் கொடுப்பனவை பெற வேண்டுமானால் விசேட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை உறுதி செய்வதற்கு மாற்று வழிகளை மேற்கொள்வதற்கு மலையக அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றில் கல்வி அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மாணவி கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை
பசறை மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவி காஞ்சனா(20) கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கற்பழிக்கப்பட்டு கோரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பசறை ஹொப்டன் பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் இசுரு சம்பத் ஜயசுந்தர என்பவர் லுணுகலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தேக நபருக்கு பதுளை நீதவான் சிரான் குணரட்ன ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
இக் கொலை தொடர்பாக பசறை பிரதேச பாடசாலைகள் மட்டத்திலும், கிராம நகர மட்டத்திலும் கண்டன பேரணிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு பிரதான சந்தேக நபருக்கு சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராககூடாதென்று அழுத்தங்களும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பசறை மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவி காஞ்சனா(20) கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கற்பழிக்கப்பட்டு கோரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பசறை ஹொப்டன் பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் இசுரு சம்பத் ஜயசுந்தர என்பவர் லுணுகலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தேக நபருக்கு பதுளை நீதவான் சிரான் குணரட்ன ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
இக் கொலை தொடர்பாக பசறை பிரதேச பாடசாலைகள் மட்டத்திலும், கிராம நகர மட்டத்திலும் கண்டன பேரணிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு பிரதான சந்தேக நபருக்கு சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராககூடாதென்று அழுத்தங்களும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் - மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடம் அமைச்சர் பெ. சந்திரசேகரன் தலைமையில் கூடியபோது பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அக்கறையோடும் உறுதியோடும் நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் மக்கள் அங்கீகாரத்தைக் கொண்ட சகல தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்களுக்குரிய வாய்ப்புகள் தொடர்பாகவும் புதிய சாசனம் உருவாக்கப்படல் வேண்டும்.
மேற்படி முடிவுகளுக்கு அனுசரணையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை வகுத்தல்.
இதற்கான ஆதரவினை பெற அரசியல் கட்சிகளையும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பொது ஸ்தாபனங்களையும் சந்தித்து தெளிவுபடுத்துவதோடு தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற வரலாறுகள் திருத்தப்படல்.
இறுதி முடிவு எடுக்கப்படும் போது அதில் அரசாங்கம் பங்குதாரதாக இருக்கக்கூடியதான திட்டங்களை வகுத்தல்
குறைந்தபட்ச சம்பளம் 400 ரூபாவாக இருப்பதற்கு சகல மட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுதல்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடம் அமைச்சர் பெ. சந்திரசேகரன் தலைமையில் கூடியபோது பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அக்கறையோடும் உறுதியோடும் நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் மக்கள் அங்கீகாரத்தைக் கொண்ட சகல தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்களுக்குரிய வாய்ப்புகள் தொடர்பாகவும் புதிய சாசனம் உருவாக்கப்படல் வேண்டும்.
மேற்படி முடிவுகளுக்கு அனுசரணையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை வகுத்தல்.
இதற்கான ஆதரவினை பெற அரசியல் கட்சிகளையும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பொது ஸ்தாபனங்களையும் சந்தித்து தெளிவுபடுத்துவதோடு தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற வரலாறுகள் திருத்தப்படல்.
இறுதி முடிவு எடுக்கப்படும் போது அதில் அரசாங்கம் பங்குதாரதாக இருக்கக்கூடியதான திட்டங்களை வகுத்தல்
குறைந்தபட்ச சம்பளம் 400 ரூபாவாக இருப்பதற்கு சகல மட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுதல்
Subscribe to:
Posts (Atom)