Saturday, November 5, 2016

12 மணித்தியாலங்கள் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் ஏற்படும்


நாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும்;; மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்ளதாகவும் அபாயம் நிலவ கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொல கொன்கோடியா பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் இருப்பதனை தொடர்ந்து 18 பேர் தங்கள் இடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையில் பாரிய அனர்த்தங்கள் எவையும் பதிவாகவில்லை என்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மத்தியநிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மததிய மாகாணத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படட்டுள்ளது. 

எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மலை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு மற்றும் நிலவெட்டுச் சாய்வுகள் இடிந்து விழக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி மாவட்டத்தில் கங்கதிகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எல்பத குருவிட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெரனியகல தெஹியோவிட்ட ருவன்வெல்ல, யட்டியாந்தோட்ட,புளத்ஹோபிட்டிய,அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டள்ளதால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். இதனிடையே கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. காலி உள்ளிட்ட கரையோரத்தை அண்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 வரையில் இருக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

No comments: