Monday, February 8, 2016

மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு

இன­வா­தத்தை வேர­றுத்து அமைதிச் சூழலை மேம்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. தூர­நோக்­குடன் செயற்­படும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். மேலும் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்று ம.ம.மு  செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், நல்­லாட்­சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலமே நடந்து முடிந்­துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் தொடர்பில் பலரும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்து வரு­கின்­றனர். இத்­த­கைய விமர்­ச­னங்­களின் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கடந்­த­கால அரசாங்கம் இனவாதத்திற்கு துணைபோன ஒரு அர­சாங்­க­மாக இருந்­தது. நாட்டு மக்கள் இன­வாத சிந்­த­னைக்குள் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டு­வதை கூட அனு­ம­திக்­காத நிலையில் சில இனவாதிகள் உள்­ளனர். எனினும் புதிய அர­சாங்கம் தமிழ்மொழிக்கு உரிய அந்­தஸ்­தினை வழங்­கு­வ­தற்கு உறுதி பூண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

19 ஆவது திருத்­தத்தின் ஊடாக இலங்­கையில் தற்­போது பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் நீண்­ட­கால இலக்­கி­னைக் கொண்­ட­ன­வாக விளங்­கு­கின்­றன. தூர­நோக்­குடன் நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இதனால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒரு தாயின் மக்­க­ளாக கை­கோர்க்கும் நிலை உரு­வாகும். மேலும் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சகல இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு நிறை­யவே உள்­ளது. விலை­வாசி குறைப்பு போன்ற நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக பலனைத் தரும். எனினும் தூர­நோக்­குடன் செயற்­படும் போது அதன் பலன்கள் உட­ன­டி­யாக வெளித்­தெ­ரி­வ­தில்லை என்­ப­தையும் விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். நீண்ட காலப்­போக்கில் நன்­மைகள் வெளித்­தெ­ரியும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் அரசின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மிகவும் கூர்ந்து கவனம் செலுத்­துதல் வேண்டும். எழுந்­த­மா­ன­மாக கருத்­து­களை தெரி­விப்­பது பிழை­யா­ன­தாகும். நாட்டில் இப்­போது இன­வாத சூழல் மெது­மெ­து­வாக குறைந்து கொண்டு வரு­கின்­றது.

இன­வாதம் பேசும் ஒரு குழு­வினர் இன்னும் அர­சி­யலில் இருந்து வரு­கின்­றனர். இவர்கள் மக்­களின் நலன்­களை கிஞ்­சித்தும் சிந்­திக்­காத சுய­ந­ல­வா­தி­க­ளாவர். ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­து­வதன் ஊடாக தன் குடும்­பத்­தையும் தன்னைச் சார்ந்­தோ­ரையும் வாழ­வைப்­பதே இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது. இத்­த­கை­யோரின் வழியில் செல்­வ­தற்கு நாட்டு மக்கள் இனியும் தயா­ராக இல்லை. வர­லாறு கற்­றுத்­தந்த பாடங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இன­வா­திகள் தம்மை திருத்திக் கொள்­வது மிக மிக அவ­சி­ய­மாகும். நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு இன­வா­திகள் குந்­த­க­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments: