Thursday, February 11, 2016

சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது

அடிப்­படைச் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான சட்­ட­மூ­லத்தை பெருந்­தோட்டத் துறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது. அது­தொ­டர்­பி­லான உரிய மீளாய்­வு­களைச் செய்­ய­வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் சம்­பளச் சபைக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரிப்­பது குறித்த பிரே­ரணை குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே  தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலை­யாட்­களை உள்­வாங்கக் கூடி­ய­தான சட்ட நடை­மு­றை­யொன்று இந்­தி­யாவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவின் ராஜஸ்­தானில் வீட்டு வேலை­யாட்­க­ளாகப் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேத­னமா­க வழங்­கப்­பட வேண்­டு­மென அச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலை­யி­லேயே எமது நாட்டில் உள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு அடிப்­படைச் சம்­பளம் தொடர்­பான சட்­ட­மூலம் தொடர்பில் பேசு­கின்றோம். தோட்டத் தொழி­லாளர் விவ­காரம் குறைந்த பட்ச வேதன சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் இச்­ச­பையில் பலர் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

தனியார் துறைக்­கான 2500 ரூபா அதி­க­ரிப்பை பெருந்­தோட்டத் தொழி லா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுத்தி­ருப்­ப­தற்கு எடுத்­தி­ருக்கும் நடவடிக் ­கையை வெற்­றி­யாகக் கருதமுடியும். நாளொன்­றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபா­வா­கவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபா­வா­கவும் இருக்கும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் தோட்­டத்­தொ­ழி­லாளர் விவ­கா­ரத்தில் கூட்டு ஒப்­பந்தம் முறையின் கீழ் செல்­லும்­போதும் அர­சாங்­கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்­பது சிக்­க­லுக்­குள்­ளாகும். கூட்டு ஒப்­பந்தம் இதற்கு தடை­யாக அமையும். இத­னால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்­பந்­தத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்தி வரு­கிறோம். குறிப்­பாக தொழி­லா­ளர்­களின் வர­வுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூட்டு ஒப்­பந்தம் காணப்­ப­டு­கி­றது.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் நிலு­வை­யி­லுள்ள ஊழியர் சேம­லாப நிதி­யத்தை செலுத்­து­வ­தற்­காக தோட்­டங்­களில் உள்ள மரங்­களை வெட்டி அதன்­மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தை பயன்­ப­டுத்­து­மாறு கடந்த அர­சாங்­கத்­தினால் வழி­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இயற்­கையை அழித்­தொ­ழித்­து­விட்டு நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.

No comments: