Saturday, January 9, 2016

ஹேவா­ஹெட்­டையில் மண்­ச­ரிவு

அங்­கு­ராங்­கெத்த ஹேவா­ஹெட்டை தோட்­டத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவு, தாழி­றக்கம் மற்றும் பாறைகள் புரண்­டதன் கார­ண­மாக 25 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்­கப்­பட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

சுமார் ஐந்து ஏக்கர் நிலப்­ப­ரப்பில் இவ்­வாறு நிலத்­தா­ழி­றக்கம், மண்­ச­ரிவு, வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­துடன் மலை­யி­லி­ருந்து கற்­களும் புரண்டு கொண்­டி­ருக்­கின்­றன. சீரற்ற கால­நி­லை­யுடன் தொடர்ச்­சி­யாக மழை பெய்­வதன் கார­ண­மா­க இடம்­பெ­யர்ந்த மேற்­படி 65 பேரும் ஹேவா ஹெட்டை விவே­கா­னந்தா தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்­று­முன்­தினம் வியா­ழக்­கி­ழமை பாரிய சத்­தத்­துடன் பாறை ஒன்று உருண்டு வந்­ததைத் தொடர்ந்து நேற்­றைய தினமும் பாராங்­கற்கள் வரத் தொடங்­கின. இதே­நேரம் மண்­ச­ரிவும், நில­வெ­டிப்பும், நிலத்­தா­ழி­றக்­கமும் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­த­ன.
நிலை­மை­யு­ணர்ந்து உட­ன­டி­யாக செயற்­பட்ட தோட் ட முகா­மை­யாளர் மக்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். கிராம உத்­தி­யோ­கத்தர் வி. நந்­த­குமார் மற்றும் அங்­கு­ராங்­கெத்த பிர­தேச செயலாளர் பரதிப் சும­ன­சே­கர உள்­ளிட்டோர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அவ­சர அவ­சிய உத­வி­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை சம்­பவ இடத்­திற்கு வரு­கை­தந்­தி­ருந்த இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கண்டி உப.தலைவர் சின்­னையா வேலு மற்றும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் மானில பிரதிநிதி கறுப்பையா ராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அங்கு தொடர்ந்தும் சீரற்ற காலநிலையே காணப்பட்டு வருகின்றது.

No comments: