Tuesday, November 17, 2015

இ.தொ.கா வை விமர்சிப்பதிலேயே காலம் கழிகிறது

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கிய பின்னர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதிக சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக சிலர் கூறினர். அவ்­வாறு கூறி­ய­வர்­களே தற்­போது காணாமல் போயுள்­ள­தாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார். அமைச்சு அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு பேசு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரித்துக் கேட்­ட­வர்கள் நாமே­. நாம் மக்­க­ளுடன் தான் இருக்­கின்­றோ­மே­யன்றி எங்கும் காணாமல் போய்­வி­ட­வில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் தனக்கு வாக்­க­ளித்து வெற்றி பெற­வைத்து தான் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரானால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னது நாட்­சம்­ப­ளத்­தை அதி­க­ரித்து பெற்­றுக்­கொ­டுப்­பே­னென்று மலை­யக அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.
 
அவர் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்­றி­யுள்ளார். அவர் அமைச்­ச­ரா­கிய பின்னர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு குறித்து பேசு­வதே கிடை­யாது. அவர் தான் தற்­போது காணாமல் போயுள்ளார். தோட்டத் தொழி­லா­ளர்க­ளுக்கு எவ்­வ­ளவு, சம்­பள உயர்­வென்­றா­வது குறிப்­பிட்ட அமைச்­ச­ருக்கு அறி­விக்க முடி­கின்­றதா?
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கேட்­டது இ.தொ.கா. வேயாகும். ற்­போ­தைய வாழ்­க்கைச்­செ­லவு உயர்­வுக்கு அமைய கோரப்­பட்ட ஆயிரம் ரூபா சம்­பள உயர்வும் போதாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. மா மற்றும் பருப்பு உள்­ளிட்ட பொருட்­களின் விலை உயர்­வையும் இங்கு குறிப்­பி­டலாம்.
 
அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கி­யதும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கூறிய கூற்று தற்­போது என்­ன­வா­யிற்று? ஒரு வரு­டத்தில் இரு­பது வீடு­களை மட்டும் கட்­டி­விட்டு, இரு­பத்து மூவா­யிரம் வீடு­களை, மலை­ய­கத்தில் நிரு­மா­ணித்த இ.தொ.கா. வை குறை­கூறி விமர்­சிப்­ப­தற்கு எவ­ருக்கும் அரு­கதை கிடை­யாது.
 
மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளா­கியும் கூட, மலை­யக மக்­களின் மேம்­பா­டுகள் குறித்து செயற்­ப­டாமல், எதற்­கெ­டுத்­தாலும் இ.தொ.கா. வை விமர்­சிப்­ப­தி­லேயே அவர்கள் காலத்தை கழித்து வரு­கின்­றனர்.
 
இ.தொ.கா. சார்பில் மத்­திய அரசில் அமைச்­சர்­க­ளாக இல்­லாத போதிலும் தோட்டத் தொழி­லா­ளர்களின் மேம்­பாடு விட­யத்தில், இயன்­ற­வ­ரை­யி­லான சேவை­களை மேற்­கொண்டு வரு­கி­ன­்றது. இந்­நி­லையில் மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் தமது இய­லா­மையை உணர்ந்து வெட்­கப்­படல் வேண்டும்.
 
மலை­யக அமைச்­சர்­க­ளாக இருக்கும் இவர்கள் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு தொடர்­பாக எத்­தனை போராட்­டங்­களை நடத்­தி­னார்கள் என்­பது கேள்வி குறி­ய­தாகும். இத்தகைய நிலையை கைவிட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அவர்கள் முன்னெடுக்க பழகிக்கொள்ளல் வேண்டும்.
 
மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைச்சர்களுக்கு திராணியில்லாவிட்டால் அந்த அமைச்சர் பதவியினால் எத்தகைய பயனும் கிடையாது என்பதனையும் உணர வேண்டும் என்றார்.

No comments: