Tuesday, November 17, 2015

தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே போதுமானது

பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு உரிய சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்கு அர­சியல் பலம் அவ­சி­ய­மில்லை. தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே தேவை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்­டமான் இத­னையே கையாண்டு சாதனை படைத்தார் என்று சௌமிய இளைஞர் நிதி­யத்தின் தலைவர் எஸ்.பி. அந்­தோ­னி­முத்து தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், கூட்டு ஒப்­பந்த நவ­டிக்­கைகள் தற்­போது இழு­ப­றி­யான தன்­மை­யினை அடைந்­தி­ருக்­கின்­றன. தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம் கொடுத்து வரு­கின்ற நிலையில் உட­ன­டி­யாக சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்­டிய தேவை மேலெ­ழுந்­துள்­ளது. எனினும் இது சாத்­தி­யப்­ப­டாமல் போயி­ருக்­கி­றது. 1970 முதல் 77 வரை­யான கால­கட்­டத்தில் அமரர் தொண்­டமான் எவ்­வி­த­மான அர­சியல் பலமோ அந்­தஸ்தோ இல்­லாது பல்­வேறு தொழிற்­சங்க போராட்­டங்­க­ளையும் நடத்தி மலை­யக மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்தார். துன்ப துய­ரங்­களை தன­தாக்கிக் கொண்டு துணி­வுடன் செயற்­பட்டார். அக்­கா­லப்­ப­கு­தியில் பெருந்­தோட்ட மக்கள் சொல்­லொணா துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருந்த நிலையில் முழு மலை­ய­கமும் ஸ்தம்­பிக்கும் வகையில் ஒரு பாரிய வேலை நிறுத்தப் போராட்­டத்தை தலை­மை­யேற்று நடத்­தினார்.
 
சாத்­வீக போராட்­டங்­களை நடத்­திய அவ­ருக்கு 1977இல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகும் வாய்ப்பு கிடைத்­தது. அமரர் தொண்­டமான் அர­சி­யலில் கிங் மேற்­க­ராக திகழ்ந்தார். அவர் நடத்­திய பிரார்த்­தனை ரீதி­யி­லான தொழிற்­சங்க போராட்­டமே பெருந்­தோட்ட மக்­க­ளது பிரஜா உரி­மைக்கும் சம்­பள உயர்வு மற்றும் சம­சம்­ப­ளத்­திற்கும் வித்­திட்­டது எனலாம்.
 
உரிமை இல்­லா­தி­ருந்த மலை­யக சமூ­கத்­திற்கு உரி­மை­க­ளையும், முக­வ­ரி­யையும் தொண்­ட­மானே பெற்றுக் கொடுத்தார் என்றால் மிகையா­காது. மலை­யக மக்கள் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு அவரே உந்து சக்­தி­யாக இருந்தார் என்­பதே உண்­மை­யாகும்.
 
அர­சியல் பலம் இல்­லாத போதும் தொழிற்­சங்க பலம், பேரம் பேசும் சக்தி என்­பன மலை­யக மக்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள வழி­வ­குத்­தது. இத்­த­கைய செயற்­பா­டுகள் ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கவும் அமைந்­தது. தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்­திலும் அமரர் தொண்­ட­மானின் காய் நகர்த்­தல்­களை முன்­னி­றுத்தி செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும்.
 
இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் கம்­ப­னிகள் நட்டம் ஏற்­பட்டு விட்டதாக கூக்குரல் இடுவதனை விடுத்து இலாபம் தரும் நோக்கில் கம்பனிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேல்மட்ட செலவுகளை கட்டுப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது ஒன்றும் கம்பனிகளுக்கு கடினமான விடயமல்ல என்றார்.

No comments: