Tuesday, October 20, 2015

குடியிருப்புகளிலிருந்து வெளியேற பணிப்பு

நோர்வூட் ரொக்வூட் தோட்டம் மற்றும் ஹட்டன் மற்றும் சமனலகம ஆகிய தோட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலய அதிகாரிகள், இன்று திங்கட்கிழமை (19) விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது, ஹட்டன் சமனலகம பகுதியில் 12 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்துக்குள்ளாகியிருப்பதாகவும் நோர்வூட், ரொக்வூட் தோட்டப்பகுதியும் மண்சரிவு அபாயத்துக்குள்ளாகிவருவதாக தெரிவித்தனர். எனவே, இப்பகுதிகளில்; மழை தொடருமானால் அங்கு வாழும் மக்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 வீடுகள் சேதம்

நாகசேனை, தலாங்கந்தை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(18) இரவு, மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 வீடுகள் சேமாகியுள்ளதுடன் இவ்வீடுகளில் வசித்து வந்த 15 பேர் தோட்டத்திலுள்ள ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இப்பகுதியில் நேற்று பெய்த கடும்மழையை தொடர்ந்து மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. 




No comments: