Monday, August 11, 2014

சிறுத்தை பிடிபட்டது

நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டப்பகுதியில் சுமார் ஏழு வயது நிரம்பிய சிறுத்தை ஒன்றை ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
 

இதே பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையே இதுஎன  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

பிடிக்கப்பட்ட சிறுத்தையை அப்பிரதேச காட்டுப்பகுதியில் விடுவித்தால் அப்பிரதேச மக்கள் பெரும் ஆபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சிறுத்தையை கொழும்பு தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளனர்.

No comments: