Monday, August 11, 2014

ரதல்ல மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா ரதல்லை நகரில்  பிரதேச மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றை அங்கரிருத்து அப்புறப்படுத்துமாறு கோரி ரதல்லை நகரை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்தில் மதுபானசாலையால்   மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ரதல்லை நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தினால்   வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது

இன்று  காலை 10 மணி தொடக்கம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை தமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: